ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் – 20, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் – 20, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019 

  • 2018-19 ஆம் ஆண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதியான (ஈபிஎஃப்ஒவின்) வைப்புத்தொகையின் 8.65 சதவீத வட்டி விகிதத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியா பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மங்கோலிய அதிபர் கல்ட்மகின் பட்டுல்கா ஆகியோர் இணைந்து உலான்பாதரில் உள்ள கந்தன் புத்த மடாலயத்தில் புத்தர் சிலையை வீடியோ கான்பரன்சிங் மூலம் வெளியிட உள்ளனர்
  • 55 வது இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ஐ.டி.இ.சி) தினம் செப்டம்பர் 19 அன்று பங்களாதேஷின் டாக்காவில் கொண்டாடப்பட்டது.
  • பண்டைய சங்க யுகத்தின் கலாச்சார வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக தொல்பொருள் துறை (டி.என்.ஏ.டி), சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில்  அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட கலாச்சார வைப்புகளை கி மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 1 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்திற்குட்பட்டது என்று தெரிவித்துள்ளது.
  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ஸ்ரீ தாவர்சந்த் கெஹ்லோட் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான மத்திய ஆலோசனைக் குழுவின் மூன்றாவது கூட்டம் புதுடில்லியில் நடைபெற்றது.
  • இந்தியாவிற்கும் பெல்ஜியம் லக்சம்பர்க் பொருளாதார ஒன்றியத்திற்கும் இடையிலான கூட்டு பொருளாதார ஆணையத்தின் (ஜே.இ.சி) 16 வது அமர்வு 2019 செப்டம்பர் 17 அன்று புதுதில்லியில் நடைபெற்றது .
  • ஒரு நாட்டில் இருக்கும் மக்கள் அதிக அளவில் உலகில் உள்ள பிற நாடுகளுக்கு குடியேறுவதில், இந்தியா முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது, 2019 ஆம் ஆண்டின் படி 5 மில்லியன் சர்வதேச புலம்பெயர்ந்தோர் இந்தியாவில் இருந்து வருகிறார்கள், இது 2015 ல் 15.9 மில்லியனாக இருந்தது என்று நியூயார்க்கில்   உள்ள ஐக்கிய  நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள சர்வதேச புலம்பெயர்ந்தோர் பங்கு அறிக்கை 2019ல் வெளிவந்துள்ளது .
  • உலக கால்பந்து அமைப்பான ஃபிஃபா வெளியிட்ட சமீபத்திய தரவரிசையில் இந்திய கால்பந்து அணி 104 வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ கிரிராஜ் சிங், இந்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் மீன்வளத் துறையால் வெளியிடப்பட்ட “மீன்வள புள்ளிவிவரங்கள் குறித்த கையேடு – 2018” ஐ வெளியிட்டார்.
  • உயர்கல்வியில் சிறந்த கற்றல் விளைவுகளுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தொழில்நுட்பத்திற்கான தேசிய கல்வி கூட்டணி (நீட்) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
  • ஷிப் பில்டர் டு தி நேஷன்’ என்று அழைக்கப்படும் மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (எம்.டி.எல்), இரண்டாவது ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலான ‘காந்தேரியை’ இந்திய கடற்படைக்கு மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கியது
  • ஸ்ரீ ராஜ்நாத் சிங் லைட் காம்பாட் விமானமான (எல்.சி.ஏ) ‘தேஜாஸில்’ பயணித்த முதல் பாதுகாப்பு அமைச்சர் என்று வரலாற்றை படைத்துள்ளார்.
  • இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) துணைத் தலைவர் ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதவ்ரியாவை அடுத்த விமானப்படைத் தலைவராக (சிஏஎஸ்) அரசாங்கம் நியமித்துள்ளது.
  • அடுத்த ஒரு வருடத்திற்குள் தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) தனது புதிய பட்டாலியன்களில் பெண் பணியாளர்களை சேர்க்க உள்ளது. மத்திய அரசு, 2018 ஆம் ஆண்டில், நாட்டில் உள்ள என்.டி.ஆர்.எஃப் பட்டாலியன்களுடன் பெண்கள் குழுவை இணைக்கும் திட்டத்தை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது
  • 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய புவி அறிவியல் விருதுகள், நாடு முழுவதும் இருக்கும் இருபத்தி இரண்டு விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டன.
  • அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்று வரும் 25 வது மூத்த பெண்கள் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பின் முதல் கால் இறுதி ஆட்டத்தில் தமிழகம் 4-2 என்ற கோல் கணக்கில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தியதன் மூலம் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது
  • கஜகஸ்தானில் உள்ள நூர்-சுல்தானில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் கால்  இறுதி போட்டிகளில் வென்றதன்  மூலம் பஜ்ரங் புனியா மற்றும் ரவி தஹியா ஆகியோர் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றனர்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – செப்டம்பர் –  20, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!