Daily Current Affairs February 24 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs February 24 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs February 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 24 பிப்ரவரி 2021

தேசிய நிகழ்வுகள்

13,700 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள், தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல்!!

  • பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் புது டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் குழுவின் கூட்டத்தில் 13,700 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • அனைத்து ஆயுதங்களும், தளவாடங்களும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ வடிவமைத்து உருவாக்கிய தளங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் பற்றி

மத்திய அமைச்சர் – ராஜ்நாத் சிங்

நிறுவகிக்கப்பட்டது – 1947

தலைமையகம் – புது டெல்லி

டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை பனாடோன் ஃபின்வெஸ்ட் நிறுவனம் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்!!

  • டாடா கம்யூனிகேஷன்ஸ்  நிறுவனத்தை பனாடோன் ஃபின்வெஸ்ட் நிறுவனம் வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையகம் (சிசிஐ) இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
  • டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 26.12 சதவீத பங்குகளுக்கு மிகாமல் பனாடோன் ஃபின்வெஸ்ட் நிறுவனம் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 48.87 சதவீதமாக உள்ள பனாடோன் நிறுவனத்தின் பங்குகளை 74.99 சதவீதத்திற்கு மிகாமல் உயர்த்துவதற்கு இந்த ஒப்புதல் வழிவகை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்!!

  • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோடெராவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்திற்கு நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, “சர்தார் படேல்” ஸ்டேடியம் என்று தான் அழைக்கப்பட்டது.
  • இது 800 கோடி ரூபாய் செலவில் லார்சன் அண்ட் டப்ரோ நிறுவனத்தின் உதவியுடன் கட்டமைக்கப்பட்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானம் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
  • 63 ஏக்கரில் உள்ள இந்த மைதானத்தில் 1.10 லட்சம் பார்வையாளர்கள் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை ரசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021

மாநில நிகழ்வுகள்

ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கும் புதிய திட்டம் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது!!

  • தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓபிஎஸ் 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
  • எல்ஐசி மற்றும் யுனைடெட் காப்பீடு இந்தியா திட்டத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம் தொடங்கப்படும். இதற்கான தொகையைத் தமிழக அரசே ஏற்கும் என்று கூறப்பட்டுள்ளது.
  • இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தில் இருக்கும் குடும்பத் தலைவர் இயற்கை மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கப்படும்.
  • குடும்பத் தலைவர்கள் விபத்தில் மரணம் அடைந்தால், ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 55.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

அசாம் மாநிலத்தில் மின்பரிமாற்ற அமைப்பின் திறன் மேம்பாட்டுக்கு 304 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தம்!!

  • அசாம் மாநிலத்தில் மின் பரிமாற்ற நெட்வொர்க்கின் நம்பகத்தன்மை, திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, 304 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் மத்திய அரசு மற்றும் ஆசியன் உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank (AIIB) ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.
  • இத்திட்டம் மூலம் அசாமில் மின் பரிமாற்ற துணை நிலையங்கள் அமைக்கப்படும். தற்போதுள்ள 15 துணை மின் நிலையங்கள் மேம்படுத்தப்படும். பூமிக்கு அடியில் கொண்டு செல்லப்படும், மின் வயர்கள், ஆப்டிக்கல் மின் வயர்களாக மாற்றப்படும்.
  • இத்திட்டத்தின் மொத்த செலவு 365 மில்லியன் அமெரிக்க டாலர். இதில் 304 மில்லியன் டாலர் நிதியை ஏஐஐபி வங்கி அளிக்கும். 61 மில்லியன் டாலர் நிதியை அசாம் அரசு செலவிடும். 304 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை 24 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும்.

அசாம் பற்றி

முதல்வர்- சர்பானந்தா சோனோவால்

ஆளுநர்- பேராசிரியர் ஜெகதீஷ் முகி

தலைநகரம்- டிஸ்பூர்

நாகாலாந்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்த உலக வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம்!!

  • நாகாலாந்தில் உள்ள பள்ளிகளில் கற்பிக்கும் முறைகள், கற்றல் சூழல், பள்ளிகளின் நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்த 68 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் திட்டத்தில் மத்திய அரசு, நாகாலாந்து அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை இன்று கையெழுத்திட்டன.
  • இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு சார்பில் மொஹபத்ரா, நாகாலாந்து அரசு சார்பில் பள்ளி கல்வித்துறை முதன்மை இயக்குநர் ஷாநவாஸ், உலக வங்கி சார்பில், இந்தியாவின் இயக்குனர் ஜூனைத் அகமது ஆகியோர் கையெழுத்திட்டனர்.

நாகாலாந்து பற்றி

தலைநகரம்- கோஹிமா

முதல்வர்- நீபியு ரியோ

ஆளுநர் – ஆர்.என்.ரவி

அறிவியல் நிகழ்வுகள்

அதிவேக 5ஜி சேவை வழங்க ஏர்டெல் மற்றும் குவால்காம் கூட்டணி அமைத்துள்ளது!!

  • இந்தியாவில் 5ஜி சேவையை முழுவீச்சில் வழங்க குவால்காம் நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக ஏர்டெல் தெரிவித்து இருக்கிறது.
  • இந்தியாவில் RAN சார்ந்த திட்டத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் O RAN வழிமுறையை அமல்படுத்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.
  • O RAN போன்ற தளம் கொண்டு சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களும் 5ஜி நெட்வொர்க்குகளை செயல்படுத்த வழி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • இதுதவிர ஏர்டெல் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து 5ஜி தொழில்நுட்பத்தை பல்விதங்களில் பயன்படுத்தும் வழிமுறைகளில் செயல்பட இருக்கின்றன.

ஏர்டெல் நிறுவனம் பற்றி

தலைவர் – கோபால் மிட்டல்

நிறுவனர் – சுனில் பாரதி மிட்டல்

நிறுவகிக்கப்பட்டது – 1995

குவால்காம் பற்றி

தலைவர் (இந்தியா) – ராஜன் வக்கடியா

தலைமையகம் – கலிபோர்னியா

நியமனங்கள்

கிழக்கு பிராந்திய கடற்படை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் தருண் சோப்தி பொறுப்பேற்பு!!

  • கிழக்கு பிராந்திய கடற்படை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் தருண் சோப்திபொறுப்பேற்றுக்கொண்டார்.
  • விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் ரியர் அட்மிரல் சஞ்சய் வத்ஸ்யனிடமிருந்து அவர் இந்த பொறுப்பைப் பெற்றுக் கொண்டார்.
  • இந்த நிகழ்ச்சியின் போது அவருக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. இவர் இந்திய கடற்படையில் கடந்த 1988-ஆம் ஆண்டு சேர்ந்தார். கடக்வஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி, பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் உள்ள பாதுகாப்பு மையம், மும்பையின் கடற்படை கல்லூரி ஆகியவற்றில் ரியர் அட்மிரல் தருண் சோப்தி பயிற்சி பெற்றுள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம்!!

  • தமிழகத்திற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பதியில் உள்ள எஸ்.வி. மருத்துவ கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார்.
  • 4 பேர் தமிழகம், ஜம்மு காஷ்மீர், குஜராத், இமாச்சலப் பிரதேசங்களில் புதிதாக அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு செயல் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Download TNPSC Notification 2021 

விளையாட்டு நிகழ்வுகள்

இலங்கை வீரர் உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்!!

  • இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான 36 வயதான உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ‘டுவிட்டர்’ மூலம் நேற்று அறிவித்தார்.
  • 15 வருடங்களாக சர்வதேச போட்டியில் விளையாடியுள்ள தரங்கா இலங்கை அணிக்காக 31 டெஸ்டில் விளையாடி 3 சதம் உள்பட 1,754 ரன்களை எடுத்துள்ளார்.
  • 235 ஒருநாள் போட்டியில் விளையாடி 15 சதம் உள்பட 6,951 ரன்னும், 26 இருபது ஓவர் போட்டியில் விளையாடி 407 ரன்களையும் எடுத்துள்ளார்.

மரணங்கள்

காங்கோவில் தீவிரவாதிகள் தாக்குதலில் இத்தாலி தூதர் சுட்டுக் கொலை!!

  • ஐநா. வாகன அணிவகுப்பின் போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், காங்கோவுக்கான இத்தாலி தூதர், இத்தாலி போலீஸ் அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டனர்.
  • ஐநா. உலக உணவு திட்டத்துக்கான வாகன அணிவகுப்பு  காங்கோ  நாட்டின் வடக்கு கிவுவில் உள்ள நைரன்காங்கோவின் கோமா பகுதியில் நடந்தது.
  • தீவிரவாதிகள் மறைந்து இருந்து நடத்திய தாக்குதலில் காங்கோவுக்கான ஐநா தூதர் லூகா அட்டனாசியோ, இத்தாலி போலீஸ் அதிகாரிகள் இருவர்  கொல்லப்பட்டனர்.

இத்தாலி பற்றி

தலைநகரம் – ரோம்

நாணயம்- யூரோ

ஜனாதிபதி- செர்ஜியோ மட்டரெல்லா

Download CA Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!