Daily Current Affairs February 23 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs February 23 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)
Daily Current Affairs February 23 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs February 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தேசிய நிகழ்வுகள்

இந்திய கடற்படைக்காக டிஆர்டிஓ தயாரித்துள்ள ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது!!

  • இந்திய கடற்படைக்காக டிஆர்டிஓ தயாரித்துள்ள குறுகிய தூரம் செங்குத்தாக சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அமைப்பு (DRDO) முப்படைக்கும் தேவையான ஆயுதங்களை தயாரித்து வருகிறது.
  • நிலத்தில் இருந்து வான் நோக்கி குறுகிய தூர இலக்கை செங்குத்தாக சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணையை உருவாக்கியுள்ளது.

டிஆர்டிஓ பற்றி

நிறுவகிக்கப்பட்டது – 1958

தலைமையகம் – புது டெல்லி

ரூ.70 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு ஆயுதம் தயாரிக்கப்படும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் தகவல்!!

  • 2021-22-ம் நிதியாண்டில் ரூ.70,221 கோடிக்கு உள்நாட்டில் ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்படும்.
  • இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
  • இதன் மூலமாக நாட்டில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

மொரீஷியஸ் நாட்டிற்கு இந்தியா சார்பில் 724 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது!!

  • ராணுவ தடவாடங்களை கொள்முதல் செய்வதற்காக மொரீஷியஸ் நாட்டிற்கு இந்தியா 724 கோடி ரூபாயினை கடனாக வழங்கியுள்ளது.
  • இந்த கடன் தொகையினை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் வழங்கியுள்ளார். இத்துடன் இந்தியா மற்றும் மொரீஷியஸ் நாடுகள் பொருளாதார ஒத்துழைப்பிற்கான ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளன. முதல் முறையாக ஒரு ஆப்பிரிக்க நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

மாலத்தீவு – இந்தியா இடையே ‘பெருந்தொற்று காலத்தில் சிறந்த நிர்வாக நடைமுறைகள்’ பற்றிய 2 நாள் பயிலரங்கு தொடங்கியது!!

  • மாலத்தீவு சிவில் சர்வீஸ் கமிஷன், மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையின்  சிறந்த நிர்வாகத்துக்கான தேசிய மையம்  இடையே ‘பெருந்தொற்று காலத்தில் சிறந்த நிர்வாக நடைமுறைகள்’ பற்றிய 2 நாள் பயிலரங்கு தொடங்கியது. இரு நாடுகளும் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் தளமாக இந்த பயிலரங்கம் இருக்கும்.
  • இந்த பயிலரங்கில், மாலத்தீவைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.  தொற்று காலத்தில் மாலத்தீவில் சுகாதாரம் மற்றும் கல்வி, தலைமை மற்றும் ஊக்கம், தொற்று காலத்தில் இந்தியாவில் சுகாதாரத்துறை செயல்பாடுகள், வேலை திறன்கள் மற்றும் சுற்றுலா, டிஜிட்டல் நடைமுறைகள் உட்பட பல விஷயங்கள்  குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

மாநில நிகழ்வுகள்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!!

  • புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக, துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் நாராயணசாமி கடிதம் அளித்துள்ளார்.
  • புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால், அங்கு ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இதனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின.
  • இதனை அடுத்து புதுச்சேரியில் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவந்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021

ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலையம் உத்தர பிரதேச மாநிலத்தில் உருவாக்கப்படவுள்ளது!!

  • ஆசிய கண்டத்தின் மிக பெரிய விமான நிலையத்தினை உத்தர பிரதேச மாநிலத்தில் அமைக்க அந்த மாநிலத்தின் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது.
  • அந்த விமான நிலையத்திற்கு “Jewar Airport” என்று பெயரிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இதனை கட்டுவதற்காக 2000 கோடி ரூபாய் அந்த மாநிலத்தின் பட்ஜெட் தாக்கலில் போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த விமான நிலையம் 6 (runway) இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதே போல் உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியாவில் கட்டப்பட்டு வரும் விமனநிலையத்திற்கு “Maryada Purushottam Sriram” என்று பெயரிட முடிவு செய்துள்ளனர்.

உத்தரபிரதேசம் பற்றி

முதல்வர் – யோகி ஆதித்யநாத்

ஆளுநர்- ஆனந்திபென் படேல்

தலைநகரம்- லக்னோ

தமிழகத்தில் 1002 கோடி ரூபாயில் புதிதாக கால்நடை ஆராய்ச்சி மையம் திறப்பு!!

  • தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் கால்நடை கல்லூரியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
  • சேலம் மாவட்டத்தில் கால்நடைகளின் வளர்ப்பினை ஊக்குவிக்கவும், கலப்பின பசுக்கள் குறித்த ஆராய்ச்சியினை மேம்படுத்தவும் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 1002 கோடி ரூபாயில் 1100 ஏக்கர் நில பரப்பில் இந்த மையம் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மேலும் சில திட்டங்களையும் திறந்து வைத்தார்.

Download TNPSC Notification 2021 

நியமனங்கள்

மகாராஷ்டிரா பிராந்திய கடற்படை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் அதுல் ஆனந்த் நியமனம்!!

  • மகாராஷ்டிரா பிராந்திய கடற்படை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் அதுல் ஆனந்த் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • இந்நிகழ்ச்சி இந்திய கடற்படை தளமான ஐஎன்எஸ் குஞ்சாலியில் நடந்தது.
  • அங்கு ரியர் அட்மிரல் அதுல் ஆனந்துக்கு அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. இவர் இந்திய கடற்படையின் நிர்வாகப் பிரிவில் கடந்த 1988ம் ஆண்டு சேர்ந்தார்.
  • கடக்வஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் இவர் பயிற்சி பெற்றவர். அமெரிக்காவின் ஹவாய் பகுதியில் உள்ள பாதுகாப்பு படிப்புகளுக்கான ஆசிய பசிபிக் மையத்தில் நவீன பாதுகாப்பு ஒத்துழைப்பு படிப்பை இவர் முடித்துள்ளார்.
  • விசிஸ்ட் சேவா பதக்கம் பெற்றுள்ள இவர், கடற்படையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். போர் கப்பல்கள் பலவற்றிலும் பணியாற்றியுள்ளார்.
  • மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக பிரவாஸ் குமார் சிங் நியமனம்!!
  • மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக பிரவாஸ் குமார் சிங்கிற்கு மத்திய மின்சாரத் துறை இணை அமைச்சர் ஆர்கே சிங் முன்னைலையில் பதவியினை ஏற்று கொண்டார்.
  • சட்டப்படிப்பு படித்துள்ள அவர், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன், ஜார்க்கண்ட் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார்.
  • மின்சாரத் துறையில் முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் மத்திய ஆணையம் தொடர்பான இதர விஷயங்களில் மத்திய அரசுக்கு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசனைகள் வழங்கும்.

விருதுகள்

இந்த ஆண்டு 12 நிறுவனங்கள் தேசிய தொழில்நுட்ப விருதுகளுக்கு தேர்வு!!

  • புதுமையான உள்நாட்டு தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக விற்பனை செய்ததற்காக, தமிழகத்தை சேர்ந்த 2 நிறுவனங்கள் உட்பட 12 நிறுவனங்கள் தேசிய தொழில்நுட்ப விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
  • உள்நாட்டு தொழில்நுட்பங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் என 3 பிரிவுகளின் கீழ் இந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
  • இந்த ஆண்டுக்கான விருது மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப வளர்ச்சி வாரியத்தால் வழங்கப்பட்டது. 128 விண்ணப்பங்களை இரண்டு முறை ஆய்வு செய்த பிரபல தொழில்நுட்ப நிபுணர்கள், வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

தொழில்நுட்ப புதுமைகளுக்கான 10-வது தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன!!

  • பெட்ரோகெமிக்கல் மற்றும் கீழ்நிலை நெகிழிப் பதப்படுத்துதல் தொழில்களில் தொழில்நுட்ப புதுமைகளுக்கான 10-வது தேசிய விருதுகளை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் டிவி சதானந்த கௌடா வழங்கினார்.
  • ரசாயனம் மற்றும் உரங்கள் துறையின் முயற்சியான பெட்ரோகெமிக்கல் மற்றும் கீழ்நிலை நெகிழிப் பதப்படுத்துதல் தொழில்களில் தொழில்நுட்ப புதுமைகளுக்கான தேசிய விருதுகள், பாலிமர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் ஈடுபட்டுள்ள புகழ்பெற்ற விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழிலதிபர்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.
  • 2007 ஏப்ரலில் தேசிய பெட்ரொகெமிக்கல் கொள்கை அறிவிக்கப்பட்டது.

ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் பற்றி

தலைமையகம் – புது டெல்லி

மத்திய அமைச்சர் – டிவி சதானந்த கௌடா

Download CA Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!