தாய்லாந்தின் குரங்கு திருவிழா…100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய தமிழக கிராமம் – Daily Current Affairs 29 November 2021
இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 23 வரை நடைபெற உள்ளது.
எரிசக்தி சேமிப்பு திருத்த மசோதா, மத்திய ஊழல் தடுப்பு ஆணைய திருத்த மசோதா உட்பட 26 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
முதலாவதாக வேளாண் சட்டங்களை திரும்பப்பெறப்படும் மசோதா நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மாணவர் படை தினம்
73 ஆவது தேசிய மாணவர் படை தினம் நேற்று இந்தியா முழுவது கொண்டாடப்பட்டது.
தேசிய மாணவர் படை,இந்தியாவில் ஏப்ரல் 16, 1948-ஆம் வருடம் தொடங்கப் பெற்றது.
இந்தியாவில் 30 லட்சம் பேர் தேசிய மாணவர் படையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பிரதமர் நரேந்திரமோடி என்.சி.சி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர் ஹென்றி லெவின்ஜின் பிறந்தநாள் விழா
கொடைக்கானலில் முக்கிய பகுதியாக விளங்கும் 24 ஏக்கர் அளவிலான நட்சத்திர ஏரியை உருவாக்கிய சர் ஹென்றி லெவின்ஜின் 202 பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இவர் 1864 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது இந்த ஏரியை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் சந்தை மதிப்பு 100 கோடி டாலர்
நேற்று நடந்த மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் கூறியதாவது இந்தியாவில் உள்ள 70 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தற்போதைய சந்தை மதிப்பு 100 கோடி டாலராக உள்ளது என்று கூறியுள்ளார்.
2015 ஆம் ஆண்டில் 9 முதல் 10 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தன இருந்தன தற்போது இது 70 ஆகா வளர்ச்சியடைந்துள்ளது.
தாய்லாந்தின் குரங்கு திருவிழா
தாய்லாந்தில் உள்ள லோப்புரி மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான குரங்குகள் காணப்படுகின்றன.
வருடம் தோறும் நவம்பர் மாதத்தின் இறுதியில் குரங்கு திருவிழா நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகால நடைபெறாமல் இருந்த திருவிழா தற்போது தொடங்கியுள்ளது.
இந்த திருவிழாவில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அனைவரும் குரங்குகளுக்கு பிடித்தமான உணவு பொருள்களை வழங்குவர்.
மன்னார் வளைகுடா தீவுகளில் பனைமர விதைகள்
மன்னார் தீவுகளில் ஒன்றான தூத்துக்குடி பகுதியிலுள்ள வான் தீவை பாதுகாக்க கடல் அரிப்பை தடுக்கும் நோக்கில் பனை விதைகள் நடும்பணி 2018 ஆம் ஆண்டு தொடங்கியது.
இதுவரை வான்தீவில் மட்டும் 2000 பனைவிதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 25 ஆயிரம் விதைகள் மன்னார் வளைகுடா தீவுகள் முழுவதுமாக நடப்பட்டுள்ளது.
இந்த செயலிற்கு தூத்துக்குடி மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராமம்
தமிழகத்தின் திருமங்கலத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமம் தமிழகத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராமமாக திகழ்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு வாரம் கொரானா விழிப்புணர்வு வாரம் சிறப்பாக நடத்தியதற்காகவும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதற்காகவும் மாவட்ட ஆட்சியர் எஸ்.அனிஷ் சேகர் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.
செக் குடியரசின் புதிய பிரதமர்
இதுவரை செக் குடியரசின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த பீட்டர் ஃபியாலா தற்போது பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் செக் குடியரசின் பிரதமராக நேற்று பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய துப்பாக்கி சுடுதல் இந்தியாவிற்கு 3 தங்கம்
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் போட்டியில் பஞ்சாபி வீரர் ராஜ்வீர் சிங் கில் 3 தங்கபதக்கங்களைபெற்றுள்ளார்.
ஆடவர் ஸ்கிட், ஜூனியர் ஸ்கிட் அணிகளில் தங்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாரா உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்
ஜார்ஜியாவில் நடைபெற்ற உலக பாரா பவர் லிஃப்ட்டிங் போட்டியில் இந்தியா வீரர் பரம்ஜித் குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் மொத்தமாக 158 கிலோ பவர் லிஃப்ட்டிங் செய்து 3 ஆம் இடம் பிடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் பரம்ஜித் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முத்தரப்பு கூட்டு போர் பயிற்சி தொடக்கம்
15 ஆவது முத்தரப்பு இரண்டு நாள் கப்பற்படை போர் பயிற்சி மாலத்தீவு கடல் பகுதியில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சிக்கு தோஸ்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்திய- மாலத்தீவு க்கு இடையேயான இருதரப்பு பயிற்சியாக மட்டுமே இருந்தது. 2012 இல் இலங்கையும் இணைத்து முத்தரப்பு போர் பயிற்சியாக மாறியது.
இந்தியா பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதன் நோக்கில் இந்த போர் பயிற்சியானது நடைபெற்று வருகிறது.