Daily Current Affairs 19 November 2021 in Tamil
சல்மான் கானை கோவிட் தடுப்பூசி தூதராக மகாராஷ்டிர அரசு நியமிக்க உள்ளது
- மகாராஷ்டிராவின் கோவிட்-தடுப்பூசி தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் வரவுள்ளார்.
- முஸ்லீம் பெரும்பான்மை சமூகங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு தடுப்பூசிகளைப் பெறுவதில் தயக்கம் உள்ளது, என்று மகாராஷ்டிரா பொது சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் கூறுகிறார்.
- மேலும் மக்களுக்கு தடுப்பூசியைப் பற்றி விழிப்புணர்வு தருவதற்கு பாலிவுட் நடிகர் சல்மான் கானின் உதவியை அரசாங்கம் நாடவுள்ளது.
KVG வங்கி சிறந்த டிஜிட்டல் நிதிச் சேவைக்கான ASSOCHAM விருதை பெற்றுள்ளது
- கர்நாடக விகாஸ் கிராமீனா வங்கி சிறந்த ‘டிஜிட்டல் நிதிச் சேவைகளுக்கான’ விருதை ASSOCHAM மூலம் பிராந்திய கிராமப்புற வங்கிகள்’ (RRBs) பிரிவின் கீழ், பெற்றுள்ளது
- இந்த விருதை வங்கியின் தலைவரானா பி.கோபிகிருஷ்ணா இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஆர்.குருமூர்த்தியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
- நடந்த இடம் : பெங்களூர்
கர்நாடக விகாஸ் கிராமீனா வங்கிக்கான பிற விவரங்கள்
- நிறுவப்பட்டது: 2005;
- தலைமையகம்: தரவாடு, கர்நாடகா;
- தலைவர்: பி.கோபிகிருஷ்ணா.
உலக கழிப்பறை தினம் – நவம்பர் 19
- உலக கழிப்பறை தினம் என்பது முன்கள பணியாளர்களுக்காக கொண்டாடுவதாகும். .அவர்கள் நமக்காக செய்யும் அனைத்திற்கும் – நமது கழிவுகளை அகற்றுவது முதல் நமது ஆரோக்கியம், பாதுகாப்பு வரை கொண்டாடுவதாகும்.
- ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நவம்பர் 19 ஆம் தேதியை உலக உலக கழிப்பறை தினமாக நியமித்தது, கழிப்பறைகளின் கண்டுபிடிப்பைக் கொண்டாடுவதும், உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த தினத்தின் நோக்கமாகும்.
- கழிப்பறை இல்லாத வாழ்க்கை அழுக்காகவும், ஆபத்தானதாகவும் இருக்கும்.
ஆசிய வில்வித்தையில் தங்கம் வென்றார் ஜோதி
- வங்கதேசத்தின் டாக்கா நகரில் நடந்த் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார். இந்தியாவின் ஜோதி சுரேகா
- இதில் மகளிருக்கான காம்பவுண்ட் பிரிவு அரை இறுதி சுற்றில் ,தென் கொரியாவின் கிம் யங்கீயை எதிர்த்து இந்தியாவின் ஜோதிசுரேகா விளையாடினார். இதில் ஜோதி சுரேகா 148-144 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதி சுற்றிற்கு நுழைந்தார்.
- இறுதி சுற்றில் , முன்னாள் உலக சாம்பியனான கொரியாவின் ஓ யூஹ்யூனை எதிர்த்து இந்தியாவின் ஜோதிசுரேகா விளையாடினார். இதில் ஜோதி சுரேகா 146-145 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம்
- மூத்த நீதிபதியான எம்.துரைசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாதாக . சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது
- சென்னை உயர் நீதி மன்றத்தின் முன்னால் தலைமை நீதிபதியான சஞ்சிப் பானர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைவராக மாற்றப்பட்டார்
- நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார் , நீதிபதி பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சேர்ந்தவுடன், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக செயல்படுவார்
ED தலைவர் எஸ்.கே. மிஸ்ராவுக்கு மேலும் ஓராண்டு நீட்டிப்பு
- மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறையின் உத்தரவின் படி அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், “ஐஆர்எஸ், , அமலாக்க இயக்குநராக உள்ள ஸ்ரீ சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை 18.11.2021க்குப் பிறகு ஓராண்டுக்கு 18.11.2022 அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நீடிப்பதாக இந்தியக் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
7,287 கிராமங்களில் மொபைல் சேவைக்கு அமைச்சரவை ஒப்புதல்
- ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் உள்ள 44 ஆர்வமுள்ள மாவட்டங்களின் 7,287 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4g மொபைல் சேவைகள்
- ₹6,466 கோடி மதிப்பீட்டில். வழங்கபடுகிறது
- யுனிவர்சல் சர்வீஸ் ஒப்லிகேஷன் ஃபண்ட் (USOF) மூலம் நிதியளிக்கப்பட்ட இந்த திட்டம் ஒப்பந்தம் கையெழுத்தான 18 மாதங்களுக்குள் முடிக்கப்படும்.
ஹேமமாலினிக்கு சிறந்த திரைப்பட ஆளுமைக்கான விருது
- சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டிற்கான சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது, நடிகையும், மதுரா தொகுதி எம்.பி.,யுமான ஹேமமாலினி மற்றும் இந்திய திரைப்பட தணிக்கை குழு தலைவரும், பிரபல பாடலாசிரியருமான பிரசூன் ஜோஷிக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது
- மேலும் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது
- கோவாவில் நடைபெற இருக்கும் 52வது சர்வதேச திரைப்பட விழாவில், இவர்கள் இருவருக்கும் இந்த விருது வழங்கி கவுரவிக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறுகிறார்
சர்வதேச ஆண்கள் தினம் – நவம்பர் 19
- சர்வதேச ஆண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 அன்று கொண்டாடப்படுகிறது
- இந்த ஆண்டு இந்த தினத்தின் கருப்பொருள் “ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சிறந்த உறவுகள்” என்பதாகும்.
- சர்வதேச ஆண்கள் தினம் ஆண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்தவும், நேர்மறையான ஆண் முன்மாதிரிகளை ஊக்குவிக்கவும் கொண்டாடபடுகிறது
- சர்வதேச ஆண்கள் தினத்தின் நோக்கம் ஆண்களுக்கு எதிரான பாகுபாடுகளில் கவனம் செலுத்துவதும், அனைவருக்கும் சிறந்த மற்றும் பாதுகாப்பான இடத்தை உருவாக்குவதன் மூலம் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதும் ஆகும்.
- 1999 ஆம் ஆண்டு சர்வதேச ஆண்கள் தினம் டாக்டர் ஜெரோம் டீலக்சிங்கால் உருவாக்கபட்டது . தனது தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், நவம்பர் 19 ஐ சர்வதேச ஆண்கள் தினமாக தேர்ந்தெடுத்தார்.
தமிழ்நாட்டில் ’நம்மை காக்கும் 48 ’திட்டம் : அறிகப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் “நம்மை காக்கும் 48” என்ற புதிய திட்டத்தைத் அறிவித்துள்ளார்
- Gloden hours எனப்படும் சிகிச்சை சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்ளுக்கு முதல் சில மணி நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சை ,இது உயிரைக் காப்பாற்ற முக்கியமான சிகிச்சை ஆகும்
- முதல்வர் ஸ்டாலின் நம்மை காக்கும் 48 என்ற புதிய திட்டத்தின் மூலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சை செலவை அரசே பொறுப்பேற்க்கும் என அறிவித்துள்ளார்.
வ .உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாள் விழாவில் தமிழக முதல்வர் வ .உ.சி நூல்களை வெளியிட்டார்
- கப்பலோட்டிய தமிழனாக போற்றப்படும் வ.உ.சி.யின் 150-வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வ.உ.சி. பன்னூல் திரட்டு மற்றும் வ.உ.சி. திருக்குறள் உரை ஆகிய நூல்களைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 18.11.2021 அன்று தலைமைச் செயலகத்தில், விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி.யின் 150-வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள வ.உ.சி. பன்னூல் திரட்டு – முதல் தொகுதி மற்றும் வ.உ.சி. திருக்குறள் உரை -இரண்டாம் தொகுதி ஆகிய நூல்களை வெளியிட்டார்.
லடாக்கில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவிடம்: திறந்து வைத்தார் பாதுகாப்பு அமைச்சர்
- 1962 நவம்பர் 18-ல் கிழக்கு லடாக்கின் ரெசாங் லா பகுதியில் சீனாவுக்கு எதிராக ஒரு பெரிய போர் நடந்தது. 18,000 அடி உயரத்தில் நடந்த இப்போரில் இந்திய ராணுவத்தின் மேஜர் ஷைத்தான் சிங் தலைமையிலான குமாவுன் படைப் பிரிவினர் துணிவுடன் போராடினர்.
- ஷைத்தான் சிங் வீரமரணம் அடைந்தார். நாட்டின் மிக உயரிய பரம் வீர் சக்ரா விருது மறைவுக்குப் பிறகு இவருக்கு வழங்கப்பட்டது.
- ரெசாங் லா போரின் 59-வது நினைவு தினத்தைமுன்னிட்டு, அங்கு புதுப்பிக்கப்பட்ட போர் நினைவிடத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்துவைத்தார்.
தமிழக அரசு வேலை: 3 % ஒதுக்கீட்டு பட்டியலில் சிலம்பாட்ட வீரா்களுக்கு இடம்பெற்றனா்
- சிலம்பாட்ட வீரா்களுக்கு 3 % ஒதுக்கீட்டு அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது.
- 40 ஆண்டுகளுக்கு முன்பே மாநில விளையாட்டுகளில் ஒன்றாக சிலம்பத்தை அரசு அங்கீகரித்துள்ளது
சுய் கிராமத்தில் பல்வேறு பொது வசதிகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்
- ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள சுய் கிராமத்தில் பல்வேறு பொது வசதிகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
- ஸ்வா-ப்ரீரிட் ஆதர்ஷ் கிராம் யோஜனா (SPAGY) திட்ட த்தால் மகாதேவி பரமேஸ்வரிதாஸ் ஜிண்டால் அறக்கட்டளை மூலம் ஆதர்ஷ் கிராமமாக (மாதிரி கிராமம்) உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.
- ஜிண்டால் அறக்கட்டளை சுய் நகரை ஆதர்ஷ் கிராமமாக மாற்ற 25 கோடி ரூபாய் செலவிட்டடுள்ளது
552வது குருநானக் ஜெயந்தி 19 நவம்பர் 2021 அன்று கொண்டாடப்படுகிறது
- சீக்கிய நிறுவனர் குருநானக் தேவ் ஜியின் பிறந்த நாளை குருநானக் ஜெயந்தி, தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு பிரகாஷ் உத்சவ் அல்லது குரு புரப் என்றும் அழைக்கப்படும் குரு நானக்கின் 552 வது பிறந்தநாள் ஆகும்.
- இது சீக்கிய சமூகத்திற்கு ஒரு முக்கியமான பண்டிகையாகும்.
- 1469 இல் தல்வாண்டி என்ற கிராமத்தில் பிறந்தார். அது தற்போது பாகிஸ்தானின் நங்கனா சாஹிப்பில் அமைந்துள்ளது