மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி (DA) – நிதியமைச்சர் தகவல்!!

3
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி (DA) - நிதியமைச்சர் தகவல்!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி (DA) - நிதியமைச்சர் தகவல்!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி (DA) – நிதியமைச்சர் தகவல்!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான இந்த ஆண்டின் முதலாவது அகவிலைப்படி (DA) ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் அகவிலைப்படி:

இந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி மத்திய ஊழியர்களின் DA மற்றும் ஓய்வூதியதாரர்களின் DR கொடுக்கப்படும் என மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தது. மேலும் JCM தேசிய கவுன்சில், பணியாளர் & பயிற்சித் துறை (DOPT) மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், கொரோனா தொற்று காரணமாக பணியாளர்கள் சற்று காத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 7வது மத்திய ஊதியக்குழு மேட்ரிக்ஸ் சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட இருந்தது.

ஒரே நாளில் 3.29 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு – 3,876 பேர் உயிரிழப்பு!!

அதன் படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இப்போது 17% DA வழங்கப்பட்டு வருகிறது. இந்த DA விகிதம் 7 வது மத்திய ஊதியக்குழு காரணமாக 28 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று முறையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த DA , ஜூலை மாதம் 1 ஆம் தேதி கொடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் நாடாளுமன்றத்தின் மேல் சபையில் சமர்ப்பித்த அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான நிலுவையில் உள்ள மூன்று DA தவணைகள் குறைக்கப்படும் என்றும், மாற்றியமைக்கப்பட்ட DA விகிதங்கள் 2021 ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மூலம் 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக ஜனவரி 2020, ஜூலை 2020 மற்றும் ஜனவரி 2021 போன்ற முதல் மூன்று அகவிலைப்படிகள் நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது கொடுக்கப்படும் DA தவணைகளில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் DA நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான DA தவணைகள் கொடுக்கப்பட்ட பின்பு, நிறுத்தப்பட்ட மூன்று தவணைகள் கொடுக்கப்படும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. அரசாங்க ஆணை வரும் வரையில் எதுவும் நிச்சயம் இல்லை. கடைசி நிமிஷத்தில் கரோணா செலவுகளின் ஆல் இதை நிறுத்தி வைத்திருக்ககிறோம் என்று சொல்வார்கள்

  2. எதுவும் நிச்சயமாக வங்கியில் வரவு வைத்து பணம் எடுக்கும் வரை சொல்லமுடியாது. நல்ல செய்திக்காக காத்திருப்பதை தவிர நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பது என் கருத்து.

  3. ஜூலை ஒன்றாம் தேதி கொடுக்கிறோம் என்று சொல்லப்படவில்லை. ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து கொடுக்கப்பட
    இருக்கும் தவணையுடன் கொடுக்கப்படும், நிலுவைத்தொகை இல்லாமல்! சாதாரணமாக செப்டம்பரில் அறிவிப்பார்கள். அது வரை தற்போதைய
    நிலைமையில் ஒன்றும் எதிர்பார்க்க முடியாது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!