மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி 4% அதிகரிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் தான் அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் 4% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகி ஊழியர்களை குஷிப்படுத்தியுள்ளது.
சம்பள உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பதவி மற்றும் சம்பள உயர்வு முதலான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறையாவது அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்குவது வழக்கம். எப்போதும் ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி சம்பள உயர்வு மார்ச் மாதத்தில் உயர்த்தப்படும் மற்றும் ஜுலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்கும். இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டுமே 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 3% அதிகரித்து 31% ஆக இருந்தது.
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு தேதி வெளியீடு!
சம்பள உயர்வால் கிட்டத்தட்ட 50 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் மேலும் 3% அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 7வது ஊதியக் குழுவின் கீழ் 34% DA மற்றும் DR பெற்று வருகின்றனர். ஜூலை மாதத்தில் மேலும் 4% அகவிலைப்படி உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA அதிகரித்தால் 2.60 லட்சம் வரை சம்பளம் வரைக்கும் சம்பளம் உயர வாய்ப்பிருக்கிறது. மத்திய அரசு ஊழியரின் சம்பளம் ரூ.20000 எனில், 4 சதவீதம் என்ற விகிதத்தில் சம்பள உயர்வு அளிக்கப்பட்டால் மாதந்தோறும் ஊழியர் ரூ.800 வரைக்கும் கூடுதலாக சம்பளம் பெற வாய்ப்பிருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிப்பது தொடர்பாக கூடிய விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.