தமிழகத்தின் இத்துறை ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு – அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்தவர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் 14% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படவில்லை. இதனை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அகவிலைப்படி உயர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு பணிகளை மேற்கொண்டதால் அரசுக்கு கூடுதலான செலவினம் ஏற்பட்டது. அதனால் அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த பிறகு அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரியில் அகவிலைப்படியை 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இதே போல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களுக்கும் 14 சதவிகித அகவிலைப்படி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ? வலுக்கும் கோரிக்கை!
ஆனால் இந்த அகவிலைப்படி உயர்வு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. மேலும் இது தொடர்பாக ஓபிஎஸ் கூறியதாவது, திமுக தனது வாக்குறுதியில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றுவோருக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் 70 வயதுக்கு மேல் 10 சதவிகிதமாகவும், 80 வயதுக்கு மேல் 10 சதவிகிதமாகவும் உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
Exams Daily Mobile App Download
ஆனால் ஆட்சி அமைத்ததும், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணம் பெற்றுக் கொள்வதை அரசு தடை செய்துள்ளது. அத்துடன் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்து வைக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும் 14% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார்.