மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜூலை மாதத்தில் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வைத் தொடர்ந்து ஊழியர்களின் சம்பளமும் அதிரடியாக உயரும். இது குறித்து முழு விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.
ஜாக்பாட் அறிவிப்பு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை மார்ச் மாதம் உயர்த்தி அரசு அறிவித்தது. அப்போது அரசாங்கம் அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தியது. இதனுடன், ஊழியர்களுக்கு மூன்று மாத நிலுவைத் தொகை வழங்குவது குறித்தும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. அதன்படி ஜூலை முதல் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் 5 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்க தரவு வெளியான பிறகு, டிஏவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!
முன்னதாக ஜனவரி-பிப்ரவரி மாத தரவுகளின் அடிப்படையில், ஜூலையில் டிஏ அதிகரிப்பு இருக்காது என தகவல் வெளியானது. இந்த நிலையில் ஏப்ரல் 2022 இல் வெளியிடப்பட்ட ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கையிலிருந்து, அகவிலைப்படியில் (டிஏ உயர்வு) குறைந்தபட்சம் 4% அதிகரிப்பு இருக்கும் என்பது தெளிவாகிறது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் வேகமாக அதிகரித்த குறியீட்டெண், டிஏ இல் 5% அதிகரிப்பு இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாத ஏஐசிபிஐ குறியீட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது மார்ச் மாதத்தில் 126 புள்ளிகளில் இருந்து 2022 ஏப்ரலில் 127.7 ஆக அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் 1.7 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பணவீக்கம் மார்ச் மாதத்தில் 126 ஆகவும், பிப்ரவரியில் 125 ஆகவும் இருந்தது. பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் வரை குறியீட்டு எண் 2.7 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. மேலும் ஜூலை 1-ம் தேதி ஊழியர்களின் அகவிலைப்படியை (5%வரை) உயர்த்தி அரசு அறிவிக்கலாம் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.