மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு? ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு? ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு? ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு? ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு!

ஏழாவது ஊதியக் குழு அளித்துள்ள சமீபத்திய தகவலின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த தவணைக்கான அகவிலைப்படி தொகையை அரசாங்கம் 38% ஆக உயர்த்த வாய்ப்புள்ளதாக ஊடக அறிக்கைகள் தகவல் அளித்துள்ளன.

அகவிலைப்படி (DA) உயர்வு

இந்த ஆண்டு மார்ச் 2022 மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகை 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நடவடிக்கையால் சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைந்துள்ளனர். இதை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு DA குறித்த ஒரு நல்ல செய்தி கிடைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் கிடைக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில் ஜூலை மாத இறுதியில் DAவை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் போது, மே 3 ஆம் தேதிக்குள் டிஏ அப்டேட் வர வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய நடைமுறைகள் வெளியீடு!

இப்போது 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொகை ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. தற்போது வரை ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் DA உயர்வை வழங்குவதற்கு உடன்பாடு ஏற்பட்டால், அகவிலைப்படி (DA) தொகை 34 லிருந்து 38 சதவீதமாக அதிகரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், DA உயர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 2022 மாதத்தில் வரக்கூடும். இப்போது ஏஐசிபிஐ குறியீடு அதிகரிப்பு காரணமாக DA தொகையில் எதிர்பார்க்கப்பட்ட திருத்தம் சாத்தியமாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Exams Daily Mobile App Download

இது குறித்த அறிக்கைகளின்படி, டிசம்பர் 2021 இல் AICPI எண்ணிக்கை 125.4 ஆக இருந்தது. இருப்பினும், ஜனவரி 2022ல் இந்த AICPI எண்ணிக்கை 0.3 புள்ளிகள் குறைந்து 125.1 ஆக இருந்தது. இப்போது ஏப்ரல்-மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான எண்கள் இன்னும் வராத நிலையில், மார்ச் மாதத்தில் ஏஐசிபிஐ புள்ளிவிவரம் 1 புள்ளி உயர்வை கண்டது. இந்த AICPI எண்ணிக்கை அடுத்த மாதங்களில் 126% தாண்டினால், அரசாங்கம் DA தொகையை 4 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கான மொத்த DA தொகை 31 சதவீதத்தில் இருந்து 38 சதவீதத்தை எட்டலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!