மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – சம்பள கணக்கீடு இதோ!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊதியத்தில் அவர்களுக்கு எவ்வளவு தொகை அதிகரிக்கும் என்பது குறித்த கணக்கீடு குறித்து இப்பதிவில் காண்போம்.
அகவிலைப்படி:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இருந்து அரசு ஊழியர்கள் ஓய்வின்றி தொடர்ந்து அரசுக்கு சேவையாற்றி வருகின்றனர். இவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு கடந்த வருடம் 2 கட்டமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது 31% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 3% அகவிலைப்படி உயரக் கூடும் என்றும் தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தினர்.
1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 30 முதல் கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!
அதனை தொடர்ந்து ஊழியர்கள் 18 மாத காலமாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையை விடுவிக்க கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நேரத்தில் 2022ம் ஆண்டு முதல் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல்கள் வந்தது. அதன் படி கடந்த 1ம் தேதி முதல் அகவிலைப்படி 34% ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்தது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படி ஜனவரி 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அடிப்படை சம்பளம் 18,000 பெறும் ஊழியருக்கு 34% அகவிலைப்படியின் படி ரூ.6,120 கூடுதலாக கிடைக்கும். தற்போது ரூ.540 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அடிப்படை சம்பளம் ரூ.56,900 பெறுபவர்களுக்கு ரூ.19,346 அகவிலைப்படி கிடைக்கும். 56,900 ஊதியதாரர்களுக்கு தற்போது ரூ.1,707 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அகவிலைப்படி அதிகரித்துள்ளதால் கடந்த மார்ச் மாதத்தை விட இந்த முறை ரூ.6,828 கூடுதலாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.