அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!
லடாக் யூனியன் பிரதேசத்தில் (UT) உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தற்போதைய அடிப்படை ஊதியத்தில் 31 சதவீதத்தில் இருந்த அகவிலைப்படி (DA) தொகையை 34 சதவீதமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகை ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
சமீப காலமாக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு, சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசுத்துறை ஊழியர்களுக்கு இந்த அகவிலைப்படி தொகை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வரிசையில் தற்போது லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் 34% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
அந்த வகையில் லடாக் அரசு ஊழியர்களுக்கு தற்போதைய அடிப்படை ஊதியத்தில் 31 சதவீதத்தில் இருந்த அகவிலைப்படி (DA) தொகையை 34 சதவீதமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகை ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அடிப்படை ஊதியம் என்பது ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி பே மேட்ரிக்ஸில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் பெறப்படும் ஊதியம் என்று ஆணை தெளிவுபடுத்துகிறது. இதில், சிறப்பு ஊதியம் போன்ற வேறு எந்த வகை ஊதியமும் இதில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
இப்போது DA உயர்வு என்பது ஊதியத்தின் ஒரு தனித்துவமான அம்சமாகத் தொடரும் என்றும் FR9 (21) வரம்பிற்குள் ஊதியமாக கருதப்படாது என்றும் அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, 50 பைசா மற்றும் அதற்கு மேல் உள்ள பின்னங்களை உள்ளடக்கிய DA கணக்கில் செலுத்தப்படும் தொகையானது அடுத்த அதிக ரூபாயாக மாற்றப்படலாம் என்றும் 50 பைசாவிற்கும் குறைவான பின்னங்கள் புறக்கணிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 2022 சம்பளம் வழங்கப்படும் தேதிக்கு முன் DA நிலுவைத் தொகை செலுத்தப்படாது என்றும் அரசு தெரிவித்துள்ளது.