தமிழக நியாயவிலை கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு – முன்வைக்கப்படும் கோரிக்கை!
தமிழகத்தில் உள்ள நியாய விலை கடை ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு அரசு பணியாளர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு:
அரசின் கூட்டுறவு துறை நடத்தும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 2021 பிப்., ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. அதில் அடிப்படை ஊதியத்தில், 14 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஆனால், ரேஷன் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் தமிழக அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்ட சூரம்பட்டிவலசில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் மாநில பொது செயலாளர் தினேஷ் குமார் தலைமை வகித்தார்.
தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இனி காலை உணவு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அப்போது அவர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட அரசாணையில் புதிய அடிப்படை ஊதியத்தில் 14% அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் ஆண்டுதோறும் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு குறித்த எந்த வித் அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. இதனை குறிப்பிட்டு அரசின் ஆணை வரும் வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் நியவிலைக்கடை ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி முதல் உயர்வு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் 3% DA உயர்த்தப்பட்டு 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது.
அதை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வந்த உடன் தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று எதிர்ப்பித்திருந்த நிலையில் எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு தங்களுக்கும் இந்த மாதமே வழங்கப்பட வேண்டும் என்று போராட்டத்தில் தெரிவித்தனர். இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் சென்னையில் கூட்டுறவு சங்க பதிவாளரின் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.