தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் தான் 31 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு தற்போது 34 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது மத்திய அரசு பணி உயர்வு, சம்பள உயர்வு முதலான பல சலுகைகளை வழங்கி வருகிறது. கொரோனா காலகட்டத்தில் மட்டுமே 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் மீண்டும் மார்ச் மாதத்தில் மீண்டும் 3 சதவீதம் அதிகரித்து 34 சதவீதம் அகவிலைப்படி உள்ளது.
12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 302 காலிப் பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் என அனைவருக்கும் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது வரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
Exams Daily Mobile App Download
இதனால் முதல்வர் முக ஸ்டாலின் உடனடியாக இந்த அகவிலைப்படி உயர்வு விஷயத்தில் தலையிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் உன்னதமான பணியை செய்து கொண்டிருக்கும் தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படியை உயர்த்த வழிவகை செய்ய திமுக ஆட்சி முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.