தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் வெளியாகும் ஹாப்பி நியூஸ்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது 7வது சம்பள கமிஷன் நடப்பு ஆண்டுக்கான அகவிலைப்படி 31% சதவீதத்தில் இருந்து 34%சதவீதமாக உயர்த்தி உள்ளது. இந்த உயர்வின் மூலம் மத்திய அரசு பணிகளில் இருக்கும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வூதியர்கள் பயன் அடைந்துள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு
அதேபோல் மத்திய அரசு பணியில் இருந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் வாங்குபவர்கள் ஆகியோருக்கும் இந்த அகவிலை நிவாரணம் உயர்வின் மூலம் தக்க பலன்களும் கூடுதலான ஓய்வூதியமும் ஊழியர்களுக்கு கிடைக்கும். மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி அடிப்படையில் வருடத்திற்கு இரண்டு முறை ஜனவரி 1 மற்றும் ஜூலை 1ஆம் தேதி மறு ஆய்வு செய்து அகவிலைப்படி சம்பள உயர்வு செய்யப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 28 சதவீதத்திலிருந்து 3 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு ஜூலை 7 மாதம் 2021 முதல் 31% சதவீதமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. மத்திய அரசு மீண்டும் இன்று பணவீக்க அளவீட்டை கணக்கில் கொண்டு ஜனவரி மாதம் 31% சதவீதத்திலிருந்து அதிகரித்து 34% சதவீதம் உயர்த்தி உள்ளது. அதன் அடிப்படையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ExamsDaily Mobile App Download
அதேபோல் 7வது சம்பள கமிஷன் படி அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900 கொண்ட லெவல்-13 மற்றும் லெவல்-14 பிரிவில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகை ரூ.1,44,200 மற்றும் ரூ.2,18,200 ஆக உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே நிதி நெருக்கடி மற்றும் பணவீக்கம் உயர்வு, விலைவாசி உயர்வு எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை அளிக்க முடியாமல் உள்ளது. மேலும் , அகவிலைப்படி உயர்த்தி அளிக்கப்பட்ட அறிவிப்பிலும் 18 மாத நிலுவை தொகை எப்போது அளிக்கப்படும் என்பதை தெரிவிக்கவில்லை.