தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அரசு உத்தரவிற்கிணங்க வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த வருடம் 2 கட்டமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதன்படி 31% ஆக அகவிலைப்படி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 2022, ஜனவரி 1 முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்றனர். இந்த நிலையில் மாநில அரசு ஊழியர்களும் அகவிலைப்படி உயர்வு வேண்டி கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மானியம் கிடைக்கவில்லையா? இதை உடனே செய்யுங்கள்!
அதன்படி அகவிலைப்படி 17% இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ரேஷன் கடை ஊழியர்கள் உடனடியாக தங்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் அரசு இவர்களின் கோரிக்கையை ஏற்கததால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். அதன்படி ஜூன் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு கனிவுடன் பரிசீலித்து வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஒருவார காலத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் தங்களது கோரிக்கை குறித்து கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அரசின் உத்தரவிற்கிணங்க காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக ரேஷன் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.