மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி (DA) உயர்வு ஏப்ரல் முதல் அமல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது கர்நாடக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க உள்ளதாகவும் இதனை ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்க்கலாம்.
அகவிலைப்படி உயர்வு
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்தது. அதனால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறையத் தொடங்கியதை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் 2021 ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 11% அதிகரிக்கப்பட்டு 28% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் விரைவில் அமல்!
இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி தற்போது 31% அகவிலைப்படி பெறுகின்றனர். இந்த அகவிலைப்படியானது அனைத்து இந்திய கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டெக்ஸ் நிர்ணயம் செய்யும் பணவீக்கத்தின் அடிப்படையில் அகவிலைப்படி மற்றும் அகநிவாரண படி நிர்ணயம் செய்யப்படுகிறது. பொதுவாக அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இரு முறை வழங்கப்படுகிறது. இதனை மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்கின்றனர். இதில் கால தாமதம் ஏற்படும்போது முன் தேதியிட்டு வழங்கப்படும்.
கர்நாடக மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது தொடர்பாக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 27.25% வழங்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்னதாக 24.50 சதவீத அகவிலைப்படியை பெற்று வந்தனர். இதனை 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியுடன் நிலுவைத் தொகையும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.