மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ் – அகவிலைப்படி நிலுவைத்தொகை கிடையாது!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போன அனைத்து சலுகைகளும் இந்த ஆண்டு கிடைக்கும் என லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அந்த வகையில் அண்மையில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இருப்பினும் தற்போது அகவிலைப்படி நிலுவைத் தொகையை அரசு வழங்காது என தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றம்:
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படும். இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பின் காரணமாக நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது அத்தியாவசிய பணிகள் தவிர அனைத்து பணிகளும் முடங்கப்பட்டு இருந்தது. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு வரிவருவாய் குறைந்து, கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது .
1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் வெளியீடு!
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான பணம் செலவிடப்பட்டது. இதனால், நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்ட மத்திய அரசு 2020ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தது. பின்னர் நோய் பரவல் குறைந்து வந்ததை தொடர்ந்து ஊழியர்கள் செலவுகளை சமாளிப்பதற்காக அகவிலைப்படி உயர்வு 2021 ஆம் ஆண்டு ஜூலை முதல் மீண்டும் வழங்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை அகவிலைப்படி 31% ஆக இருந்த நிலையில், அது அண்மையில் 34 ஆக அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் பென்சனர்கள் பயன்பெறுவார்கள்.
Exams Daily Mobile App Download
தொடர்ந்து 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையை அரசு எப்போது வழங்கும் என மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், பென்சன் விதிமுறைகள் திருத்தத்திற்கான நிலைக் குழுவின் 32 வது கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் மத்திய பென்சனர் நலத்துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங்., 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படாது என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவால் மத்திய அரசு தோராயமாக 34,402 கோடி ரூபாயை சேமித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதனால் மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.