மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையை வழங்குவது குறித்து அரசு இதுவரை எந்த பரிசீலனையையும் மேற்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியானதை அடுத்து அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வருடந்தோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் குறைந்த பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் அகவிலைப்படி 11% உயர்த்தப்பட்டு மொத்தம் 28% ஆக அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் கவனத்திற்கு – இன்று பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை!
அதன் தொடர்ச்சியாக 2022ம் ஆண்டு மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் இதனால் 34% ஆக அதிகரிக்கப்படும் என்று தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் 18 மாத காலமாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி குறித்து ஊழியர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகை இன்னும் வழங்கப்படவில்லை இந்த நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 2022 ஜனவரி மாதம் முதல் இந்த நிலுவைத்தொகை கிடைக்கும். ஒரே தவணையில் வழங்க முடிவு செய்திருப்பதாக பல தகவல்கள் வெளியானது.
மாதம் ரூ.100 முதலீடு செய்தால் ரூ.3000 வரை வருமானம் – விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம்!
ஆனால் திடீரென அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையை வழங்குவது குறித்து அரசு இதுவரை எந்த பரிசீலனையும் மேற்கொள்ளவில்லை என்பதை அரசு தெளிவுபடுத்தியது. இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 2.18 லட்சம் ஊழியர்களின் எதிர்பார்ப்பும் வீணாகியுள்ளது. இந்த நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.