தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி நிலுவைத்தொகை – முதல்வரின் முடிவு என்ன?

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி நிலுவைத்தொகை - முதல்வரின் முடிவு என்ன?
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி நிலுவைத்தொகை - முதல்வரின் முடிவு என்ன?
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி நிலுவைத்தொகை – முதல்வரின் முடிவு என்ன?

தமிழகத்தில் கடந்த 2004ம் ஆண்டு முதல் தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் பங்களிப்பு பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆரம்ப காலத்தில் இருந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டம்:

தமிழகத்தில் அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களின் பணிக்காலம் முடிந்த பிறகு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பழைய ஓய்வூதிய திட்டம் கடந்த 2003ம் ஆண்டு வரை அமலில் இருந்தது. இந்த பழைய ஓய்வூதியம் கடந்த 2004ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் பங்களிப்பு பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் முழுவதுமாக கிடைப்பதில்லை என்றும் இதில் தங்களுக்கு லாபமும் இல்லை என்றும் ஊழியர்கள் ஆரம்ப காலத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ் – புகைப்படத்தை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அத்துடன் தங்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். திமுக தனது வாக்குறுதியில், தான் ஆட்சி அமைத்தால் மீண்டும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் இது தொடர்பாக முதல்வர் எடுக்கும் முடிவுக்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

இதுவரை இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாததால் பல்வேறு மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் உயர்நிலைப் பள்ளிக்கு முன்பாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் அமல்படுத்துவது, அகவிலைப்படி உயர்வின் போது வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால் இது தொடர்பாக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!