தமிழக முதல்வரின் சூப்பர் உத்தரவு… அகவிலைப்படி உயர்வு, ரூ. 3000 கருணைக்கொடை – திருக்கோயில் பணியாளர்கள் மகிழ்ச்சி!

0
தமிழக முதல்வரின் சூப்பர் உத்தரவு... அகவிலைப்படி உயர்வு, ரூ. 3000 கருணைக்கொடை - திருக்கோயில் பணியாளர்கள் மகிழ்ச்சி!
தமிழக முதல்வரின் சூப்பர் உத்தரவு... அகவிலைப்படி உயர்வு, ரூ. 3000 கருணைக்கொடை - திருக்கோயில் பணியாளர்கள் மகிழ்ச்சி!
தமிழக முதல்வரின் சூப்பர் உத்தரவு… அகவிலைப்படி உயர்வு, ரூ. 3000 கருணைக்கொடை – திருக்கோயில் பணியாளர்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருக்கோயில் பணியாளர்களுக்கு தமிழக அரசு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. அத்துடன் கருணைக்கொடை வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அகவிலைப்படி:

இந்தியாவில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படியை 38% ஆக உயர்த்தி அறிவித்தது. மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியது. இந்த நேரத்தில் தமிழக அரசு ஊழியர்கள் தங்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

வாட்ஸ் அப்பில் இனி Caption உடன் Forward Message அனுப்பலாம் – அட்டகாசமான அம்சம் அறிமுகம்!!

Follow our Instagram for more Latest Updates

இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஜனவரி 15 ஆம் தேதி வரவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 34 சதவீதத்தில் இருந்து 38% ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள். அதனைத் தொடர்ந்து தற்போது திருக்கோயில் உள்ள பணியாளர்களுக்கும் அகவிலைப்படி 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் 10,000 திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கருணைக்கொடையாக ரூ. 3000 வழங்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பால் திருக்கோயில் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!