மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ரூ.2 லட்சம் வரை அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை!
வருகின்ற 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி (DA) தொகை வழங்கப்படும் என்றும் இது குறித்து மத்திய அமைச்சரவை ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
DA தொகை
கிட்டத்தட்ட 18 மாதங்களாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி (DA) மற்றும் DR தொகை 17% ல் இருந்து 31% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த நிலுவைத் தொகை அரசு ஊழியர்களின் கணக்கில் இன்னும் டெபாசிட் செய்யப்படவில்லை. என்றாலும் இந்த தொகையை திரும்ப வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? இன்று வெளியாகும் அறிவிப்பு!
அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் இப்போது ஒரே தவணையில் இந்த நிலுவைத் தொகையைப் பெறுவார்கள் என்று ஊடக செய்திகள் கூறுகிறது. அதன் கீழ் சில பிரிவை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு இந்தத் தொகை 2 லட்சத்தை எட்டும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை வழங்குவது குறித்து மத்திய அமைச்சரவை ஆலோசித்து வருவதாக பல ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? ஆலோசனையில் முக்கிய முடிவு! இன்று அறிவிப்பு!
இப்போது JCM இன் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ராவின் அறிக்கையை மேற்கோள் காட்டிய ஒரு ஊடக நிறுவனம், லெவல்-1 ஊழியர்களின் அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என்று முன்பு குறிப்பிட்டிருந்தது. அதேசமயம், லெவல்-13 (7வது CPC அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900) அல்லது நிலை-14 (ஊதிய அளவு) உள்ள ஒரு ஊழியரின் DA நிலுவைத் தொகை ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 ஆக இருக்கும் என்றும் அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.