மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 2022 ஜனவரி DA 3% அதிகரிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - 2022 ஜனவரி DA 3% அதிகரிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - 2022 ஜனவரி DA 3% அதிகரிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 2022 ஜனவரி DA 3% அதிகரிப்பு!

2022 ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வானது அதிகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் 7வது ஊதியக்குழு பரிந்துரை அளித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஜனவரி டிஏவில் 2% முதல் 3% வரை அதிகரித்தால், ஊழியர்களுக்கு 33 முதல் 34 சதவிகிதம் வரை டிஏ கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மீண்டும் ஒரு முறை ஊழியரின் சம்பளம் அதிகரிக்கும். டிசம்பர் 2021 இறுதிக்குள் மத்திய அரசின் சில துறைகளில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர 2022ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக ஊழியர்களின் பொருத்துதல் காரணி அதிகரிப்பது உள்ளதாக முன்னதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசில் ரூ.58 ஆயிரம் மாத ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க ஜன.21ம் தேதி கடைசி நாள்!

இதன் மூலமும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமும் உயரும். தற்போது அகவிலைப்படியைப் பற்றி AICPI அளித்துள்ள அறிக்கையின் படி, நவம்பர் மாதத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு வெளியாகியுள்ளன. இதன் மூலம் 2 முதல் 3% வரை DA அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ஜனவரியில் அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம். நவம்பர் மாத AICPI குறியீடு 125.7 ஆகும். இதனால் 2 சதவீத அகவிலைப்படி அதிகரிக்கும். இருப்பினும் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இது மேலும் 1 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 2021க்குள் CPI (IW) எண்ணிக்கை 125 ஆக இருந்தால், அகவிலைப்படியில் 3 சதவீதம் அதிகரிப்பு உறுதியாகி விடும்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

அகவிலைப்படியை 3% அதிகரித்த பிறகு, மொத்த DA 34% ஆக இருக்கும். இதனால் ரூ.18,000 அடிப்படை ஊதியம் பெறுபவர் மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.73,440 ஆக இருக்கும். இவர் முன்னதாக பெற்றதை விட ஆண்டுக்கு ரூ.6,480 அதிகம் பெறுவார். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வினை கணக்கிடும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தின் கணக்கீடு:

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் – ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (34%) – ரூ.6120/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) – ரூ.5580/மாதம்
4. எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது 6120- 5580 = ரூ 540/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு 540X12 = ரூ.6,480.

அதிகபட்ச அடிப்படை ஊதியத்தின் கணக்கீடு:

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் – ரூ 56900
2. புதிய அகவிலைப்படி (34%) – ரூ 19346/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) – ரூ 17639/மாதம்
4. எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது 19346-17639 = ரூ. 1,707/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு 1,707 X12 = ரூ 20,484.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!