தமிழக திருக்கோயில் பணியாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி 38% ஆக உயர்வு!!
தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இயங்கும் திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வினை துறையின் ஆணையரே வழங்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.
அகவிலைப்படி:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த 1ம் தேதி புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி 4% உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34% இருந்து 38% ஆக உயர்ந்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதனால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் பயனடைந்துள்ளனர். மற்ற துறை ஊழியர்களை தொடர்ந்து இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இயங்கும் திருக்கோயில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வினை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரே வழங்க அரசு அனுமதித்துள்ளது.
மின்வாரியம் வெளியிட்ட ரிப்போர்ட் – ஜன.20 ம் தேதி மின்தடை உங்கள் பகுதியிலுமா?
இந்த அகவிலைப்படி உயர்வானது தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படியை தொடர்ந்து நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்களுக்கு கருணை கொடை தொகையும் உயர்த்தி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.