அரசு ஊழியர்களுக்கு 2.73% அகவிலைப்படி உயர்வு – தெலுங்கானா அரசு ஒப்புதல்!

0
அரசு ஊழியர்களுக்கு 2.73% அகவிலைப்படி உயர்வு - தெலுங்கானா அரசு ஒப்புதல்!
அரசு ஊழியர்களுக்கு 2.73% அகவிலைப்படி உயர்வு - தெலுங்கானா அரசு ஒப்புதல்!
அரசு ஊழியர்களுக்கு 2.73% அகவிலைப்படி உயர்வு – தெலுங்கானா அரசு ஒப்புதல்!

தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படிக்கான உயர்வு குறித்த தகவல்கள் தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பின் காரணமாக பல லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அகவிலைப்படி உயர்வு:

தெலுங்கானா மாநிலத்தில் நீண்ட நாட்களாக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இறுதியாக 2021 ஜனவரி முதல் ஜூன் வரையிலான தவணைக்கு மட்டுமே அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு அளிக்கப்படுவது குறித்து தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தது. இதேபோல், அரசு ஊழியர்களுக்கான இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளும் அரசுக்கு வைக்கப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

அரசு ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, தற்போது தெலுங்கானா அரசு பணியாளர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்விற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த அட்டவணையின் செயல்முறைகள் வரும் ஜனவரி 27ம் தேதி தொடங்கி, மார்ச் 4ம் தேதி முடிவடையும் என்றும், இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜனவரி 28 முதல் 30ம் தேதி வரை செலுத்த முடியும் என்றும், மார்ச் 5ம் தேதி முதல் 19ம் தேதி வரை இதற்கான மேல்முறையீடு பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bank தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? சிறந்த Study Materials! உடனே வாங்குங்கள்!

இந்நிலையில், ஜூலை 2021 முதல் முன்தேதியிட்டு DA ஆனது 17.29ல் இருந்து 2.73% உயர்த்தப்பட்டு, 20.02 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தெலுங்கானா அரசு ஊழியர்கள் 4.40 லட்சம் பேரும், 2.88 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த DA தொகை 8 தவணைகளில் ஊழியர்களுக்கு செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!