மத்திய அரசு ஊழியர்களுக்கு DA அதிகரிப்பு? அடிப்படை சம்பளத்தில் ரூ.2,08,320 உயர்வு! கணக்கீடு விபரங்கள்!
வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி (DA) தொகை உயர்த்தப்பட்டால் இதன் மூலம் ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் ரூ.2,08,320 அதிகரிக்கும் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
DA உயர்வு
இப்போது மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை 2021க்கான அகவிலைப்படி (DA ) உயர்வுக்காக காத்திருக்கின்றனர். வரவிருக்கும் நாட்களில் அரசு ஊழியர்களுக்கான DA தொகை இன்னும் 3 சதவீதம் அதிகரிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இந்த DA அதிகரிப்புக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 3 தவணைகளையும் சேர்த்து 28 சதவிகிதம் அகவிலைப்படி வழங்கப்பட இருக்கிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மீறினால் உரிமம் ரத்து! அரசு உத்தரவு!
இந்த தொகையுடன் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி தொகை 3 சதவீதம் கூடுதலாக சேர்க்கப்படும் போது மொத்த தொகை 31 சதவீதமாக அதிகரிக்கும். இந்த உயர்வு பண்டிகை காலத்துக்கு முன்னதாக கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி தொகை 3 சதவிகிதத்திற்கு மேல் அதிகரித்தால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட நிரந்தர மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளனர்.
3% DA அதிகரிப்பு மூலம் மொத்த தொகை அதிகரிப்பு:
இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான 3% DA தொகை அதிகரித்த பிறகு, ஊழியர்களின் பணம் பல்வேறு பிரிவுகளுக்கு ஏற்ப அதிகரிக்கும். இந்த DA தொகை அடிப்படை சம்பளத்தின் படி கணக்கிடப்படுகிறது. தற்போதைய 28 சதவிகித DA தொகையில் இருந்து 31 சதவிகிதமாக DA அதிகரிக்கப்பட்டால் ஊழியர்களுக்கு நேரடியாக சம்பள உயர்வு ஏற்படும்.
ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.56,000 என்றால் கணக்கீட்டின் படி:
AICPI குறியீட்டின் படி 3 சதவீத DA அதிகரிப்பு அறிவிக்கப்பட்டால் இந்த தொகை 31 சதவீதமாக அதிகரிக்கும். இப்போது, ரூ.56,000 அடிப்படையில் DA தொகையை கணக்கிட்டால், சம்பளத்துடன் மொத்த அகவிலைப்படி ரூ.17,360 என மத்திய அரசு ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். இதனுடன் 56000*31/100 = ரூ.17360 என்ற ஆண்டு அடிப்படையில் பார்த்தால், இத்தொகை 17360 * 12 = ரூ.208,320 என இருக்கும். இருப்பினும், 28 சதவிகிதம் மற்றும் 31 சதவிகித DA தொகைக்கு இடையே உள்ள வேறுபாடு மிகவும் சிறியதாகும்.
ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் ஈட்டிய லாப கணக்கு:
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜூலை மாதம் மீட்டெடுக்கப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில், ஜூலைக்கு முன் DA கணக்கீடு செய்யப்பட்டால்,
- ஊழியரின் அடிப்படை சம்பளம் – ரூ .18000 (குறைந்தபட்ச அடிப்படை சம்பளம்)
- DA உதவித்தொகை 31 சதவீதம் (மதிப்பிடப்பட்ட அதிகரிப்பு) – ரூ.5580
- அகவிலைப்படி 17 சதவீதம் (ஜூலைக்கு முன்) – ரூ. 3060
- மொத்த DA- 5580-3060 = ரூ .2520 அதிகரிப்பு
- ஆண்டு சம்பளத்தில் அதிகரிப்பு– 2520X12 = ரூ. 30,240
இந்த கணக்கீடு ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அடிப்படையாக கொண்டது. இருப்பினும், இது குறைந்தபட்ச சம்பளத்தின் அடிப்படையிலானது. இதில் அடிப்படை சம்பள அதிகரிப்புடன், வருடாந்திர DA கணக்கீடும் வித்தியாசமாக இருக்கும். மேலும் சம்பளம் உள்ளிட்ட மற்ற கொடுப்பனவுகளும் சேர்க்கப்பட்டால் இத்தொகை இன்னும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.