மாநில அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – அகவிலைப்படி உயர்வு! சூப்பர் அறிவிப்பு!
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்படும். இது கொரோன காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா குறைந்துள்ளதை அடுத்து அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவை தொகை குறித்து அரசு அறிவித்துள்ளது.
அகவிலைப்படி உயர்வு
அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியில் உயர்வு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் கொரோனா பெருந்தொற்று நோய் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதனால் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் உயர்வை 2020-ஆம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்தது.
தென் ஆப்பிரிக்க மண்ணில் வரலாறு படைக்குமா இந்திய அணி? டிச.26 முதல் டெஸ்ட் போட்டி தொடக்கம்!
அதன்படி அனைத்து மாநிலங்களும் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இதே போல் உத்தரப் பிரதேசத்திலும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3% உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அத்துடன் இதனை கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டு 28% -ஆக அமல்படுத்தபட்டது. அதன்படி ஊழியரின் மாத சம்பளம் ரூ.15000 எனில் 28% சதவீத அகவிலைப்படி ரூ.4200 அகவிலைப்படியாக பெறுவார்.
தற்போது 3% அதிகரிக்கபட்டால் அவரின் அகவிலைப்படியானது ரூ.4650 பெறுவார் என்று கணக்கிடப்படுகிறது. இவ்வாறு அடிப்படை சம்பளத்தில் 3% அகவிலைப்படியை கணக்கிடுவதன் மூலமாக எவ்வளவு சம்பள உயர்வு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியும். அத்துடன் மொத்த நிலுவை தொகையையும் தங்கள் PF கணக்கிற்கு செலுத்துவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதனால் தமிழக மற்றும் உத்தரபிரதேச அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது. அத்துடன் புத்தாண்டையும் சிறப்பாக கொண்டாடுவார்கள். இதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜனவரி மாதத்தில் 3% உயர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.