அரசு ஊழியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு -விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 42 சதவீதம் அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். அடுத்த கட்டமாக அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் வந்துள்ளது.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி அறிவிப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டது. அதில் AICPI குறியீடு 139.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. அதனால் அகவிலைப்படி 3 அல்லது 4 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் – அக்.10 கடைசி நாள்!
அவ்வாறு அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் 45 சதவீதமாக அதிகரிக்கும். இதனால் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் வெகுவாக உயரும். அடுத்தடுத்து பண்டிகை வருவதால் பண்டிகைகள் வரவுள்ளதால் பண்டிகை கால அறிவிப்பாக அகவிலைப்படி உயர்த்தப்படும் என கூறப்படுகிறது. இதனால் லட்ச கணக்கான அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்