மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை – அரசின் முடிவு என்ன?
மத்திய அரசு ஊழியர்களுக்கான 31% அகவிலைப்படி (DA) உயர்வு குறித்து 2022 பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்னர் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த உறுதியான தகவல் எதுவும் அரசு தரப்பில் இருந்து வெளியாகவில்லை.
DA தொகை
ஏழாவது ஊதியக் குழுவின் சமீபத்திய புதுப்பிப்புகளின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) நிலுவைகள் குறித்த பெரிய அறிவிப்பு அடுத்த சில நாட்களுக்குள்ளாக வரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகைக்கு தொடர்ச்சியான கோரிக்கைகள் எழுப்பப்பட்டு உள்ளது. அதனால், DA நிலுவைத் தொகை குறித்த தங்கள் கோரிக்கையை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நம்பினார்கள்.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே இரண்டு முறை விளக்கம் அளித்துள்ளது. ஆனாலும் இந்த விவகாரம் இன்னும் நிலுவையில் உள்ளது. இப்போது பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனவரி 2022க்கான பணவீக்கம் அறிவிக்கப்பட உள்ளது. ஆனால், நிலுவைத் தொகையை ஒப்புக்கொள்வது கடினம் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இப்போது JCM தேசிய கவுன்சிலின் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா கூறுகையில், கவுன்சில் அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தது.
அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் விடுப்பு – மாநில அரசு அறிவிப்பு!
ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அமைச்சரவை செயலாளருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஆனால், பட்ஜெட்டுக்குப் பிறகு தான் எந்த பதிலும் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இப்போது மிஸ்ராவின் கூற்றுப்படி, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) மற்றும் நிதி அமைச்சகம், செலவினத் துறை அதிகாரிகளுடன் JCM கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில், அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து விவாதிக்கலாம்.
மேலும், வரும் நாட்களில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், அரசு தரப்பில் இருந்து ஏதாவது உத்தரவாதம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மத்திய அரசை சேர்ந்த நிலை-1 ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை கிடைக்கலாம் என்றும் அதேசமயம், லெவல்-13 அல்லது நிலை-14 ஊழியர்களுக்கு DA நிலுவைத் தொகை ரூ. 1,44,200. 2,18,200 வரை செலுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.