தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி DA உயர்வு? முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசு விரைவில் ஊழியர்களுக்கு இன்ப செய்தியை அளிக்க உள்ளதாகவும், ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது மற்றும் ஓய்வூதிய தொகையை உயர்த்துவது குறித்து அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பென்ஷன் திட்டத்தின் முக்கியத்துவம்
இந்தியாவில் முதியவர்கள் நலன் காக்கும் வகையில் பல வகையான முதலீட்டு திட்டங்கள், சேமிப்பு திட்டங்கள், இன்சூரன்ஸ் என பல வகையான திட்டங்கள் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது
ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகை சார்ந்த புதிய அறிவிப்புகளும் புதிய நடைமுறை மாற்றங்கள் சார்ந்த தகவல்கள் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பென்சன் தொகை அதிகரிப்பு சார்ந்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
இபிஎஃப் அமைப்பின் உறுப்பினர்களுக்கு பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் பென்ஷன் வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் மட்டுமே பென்சன் கிடைத்து வருகிறது. இந்நிலையில் பென்சன் வாங்குவதற்கு சம்பள வரம்பை உயர்த்த வேண்டும் என உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கை வைத்து வருகின்றனர் என மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசு சார்ந்த துறைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வு பெற்ற பின் பென்ஷன் வழங்கப்படுகின்றன.
தமிழக ரயில் பயணிகள் கவனத்திற்கு – எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் துவக்கம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
இந்த திட்டம் பல வருடங்களாக அமலில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஓய்வு பெற்ற ஊழியர்கள் அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஊழியர்களின் பென்ஷன் பெறுவதற்கு சம்பள வரம்பு ரூ.21,000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, அரசு விரைவில் ஊழியர்களுக்கு பயன்பெறும் வகையில், ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது மற்றும் ஓய்வூதியத் தொகையை உயர்த்துவது குறித்து அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.