7 வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கான DA 28% ஆக உயர்வு!
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு முதல் அகவிலைப்படி வழங்கப்படாத நிலையில் தற்போது வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அகவிலைப்படி அறிவிப்பு:
கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு வரிவசூல் குறைந்து வருமான இழப்பு ஏற்பட்டது. இதனால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஜனவரி 2021 முதல் மீண்டும் அது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன் அனைத்துக் கட்சி கூட்டம் – மத்திய அரசு அறிவிப்பு
2021 ஜனவரி-ஜூன் முதல் அகவிலைப்படி அறிவிப்பு மற்றும் ஜூலை முதல் டிசம்பர் 2020 வரை அறிவிக்கப்பட்ட 4 சதவீத அகவிலைப்படி உயர்வு (21%) என இரு அறிவிப்புகள் 7வது ஊதியக்குழு சீரமைப்பில் இருக்கும் எனவும் அவை இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி வழங்கப்பட இருந்தது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக இந்த அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மத்திய அமைச்சரவை, ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக உயர்த்த ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு முதல் இந்த DA தொகை உயர்த்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.