அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி (DA) உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இந்த வகையில் இமாசலப் பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
மாநில அரசு அறிவிப்பு:
அகவிலைப்படி உயர்வு, அரசு ஊழியர்களுக்கு வருடம்தோறும் விலைவாசி அதிகரிப்பு/குறைவு அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசும், அம்மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது. இந்த வகையில் தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெற தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 1-1-2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.
இந்த வகையில் இமாசலப் பிரதேச மாநில அரசு தனது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அதிகரிப்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் ஆணையை தொடர்ந்து இமாசலப் பிரதேச அரசு தற்போது 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி தருவதாக முதல்வர் ஜெய் ராம் தாகூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஜனவரி 25ஆம் தேதி வெளியிடப்பட்டது.
வெளிச்சந்தையில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி விற்பனை – மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி!
மேலும் இந்த அறிவிப்பால் சுமார் 2.25 லட்சம் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெற தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் பயன் அடைவார்கள். எனவே இந்த அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ரூ.6000 கோடி வரையில் செலவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் வழங்கப்படும் பென்ஷன் போல, இமாசலப் பிரதேச மாநிலத்தில் 1.75 லட்சம் பேருக்கு பென்ஷன் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதனால் அரசுக்கு ரூ.2000 கோடி வரையில் செலவாகும் என குறிப்பிட்டுள்ளார்.