மத்திய அரசு ஊழியர்களுக்கு DA, HRA அதிகரிப்பு – இரட்டை போனஸ்? சூப்பர் தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது வீட்டு வாடகைக்கான படியும் அதிகரிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதை பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
7வது ஊதியக்குழு:
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி, ஓய்வூதிய உயர்வு போன்றவற்றை கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலினால் மூன்று தவணைகளாக நிலுவையில் வைத்தது. இதனால் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது. மேலும் அனைவரின் கோரிக்கையின் படி, கடந்த ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டது. இதனால் 17% ஆக இருந்த DA 28% ஆக அதிகரிக்கப்பட்டது.
தமிழகத்தில் அக். 6 & 9 தேதிகளில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
அகவிலைப்படி உயர்வுடன் தொடர்புடைய மற்ற பலன்களும் ஊழியர்களுக்கு அதிகரித்தது. இதனால் ஊழியர்களின் மாத ஊதியம் அதிகமாக கிடைத்தது. DA உடன் தொடர்புடைய வீட்டு வாடகை படியும் தற்போது செப்டம்பர் மாதம் முதல் அதிகரித்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை லாபம் கிடைத்துள்ளது. அகவிலைப்படி உடன் ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) அதிகரிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு மத்திய செலவினத்துறை, DA உயர்வு 25% ஐ தாண்டும் போது வீட்டு வாடகைப்படி (HRA) அறிவித்தது.
தமிழகத்திற்கு ரூ.1,112 கோடி கடன் வழங்கல் – உலக வங்கி ஒப்புதல்!
அதன்படி DA 28% ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டு வாடகை படியும் நகரங்களுக்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள படி அதிகரிக்கப்படும். X, Y மற்றும் Z என்று வகைப்படுத்தப்பட்ட நகரங்களுக்கு முறையே அடிப்படை ஊதியத்தில் 27%, 18% மற்றும் 9% ஆகும். 50 லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரம் X வகை என்றும், 5 லட்சத்திற்கு அதிகம் உள்ள நகரம் Y வகை என்றும் மக்கள் Z வகை நகரம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் அடிப்படை ஊதியத்துடன் மூன்று பிரிவுகளுக்கும் குறைந்தபட்ச வீட்டு வாடகை கொடுப்பனவு ரூ.5400, ரூ.3600 மற்றும் ரூ.1800 கிடைக்கும். இதனால் ஊழியர்களின் மாத சம்பளம் கூடுதலாக கிடைக்கும் என்றும் தெரிகிறது.