மத்திய அரசின் ‘இந்த’ துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு DA 14% உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

0
மத்திய அரசின் 'இந்த' துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு DA 14% உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசின் 'இந்த' துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு DA 14% உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசின் ‘இந்த’ துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு DA 14% உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ரயில்வே ஊழியர்களுக்கு  அறிவிப்பாக ஆறாவது ஊதியக் குழு அவர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிலுவைத் தொகையுடன் அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணம் (டிஆர்) கூடுதல் தவணையை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. ஜனவரி 1, 2022 முதல் ஓய்வூதியத்தின் தற்போதைய விகிதமான 31 சதவீதத்தை விட 3 சதவீதம் விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரசு ஜூலை 2021ல் நிறுத்தப்பட்ட தொகையை வழங்க தொடங்கியதில் இருந்து DA மற்றும் DR மூன்று உயர்வை அடைந்துள்ளது.  மேலும் அவை இருமடங்காக அதிகரித்துள்ளது.

Exams Daily Mobile App Download
சில நாட்களுக்கு முன்பு வெளியான அறிக்கைகளின் படி, ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது DA நிலுவைத் தொகை தற்போது வழங்கப்படாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியது. ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 க்கான மூன்று தவணை டிஏ மற்றும் டிஆரை மத்திய அரசு கொரோனா தொற்று நோயின் விளைவால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்கும் வகையில் நிறுத்தி வைத்தது. மார்ச் மாதம் 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியை 3 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த நடவடிக்கையால் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் லாபம் அடைகின்றனர்.
தற்போது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆறாவது ஊதியக் குழுவின் கீழ், நிலுவைத் தொகையுடன் சேர்த்து அவர்களது அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி DA 14 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பிரிவைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு அனுமதிக்கப்படும் டிஏ விகிதம் ஜூலை 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும் 189 சதவீதத்திலிருந்து 196 சதவீதமாகவும், ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் வகையில் 196 சதவீதத்திலிருந்து 203 சதவீதமாகவும் உயர்த்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் கடந்த வாரம் அறிவிப்பில் தெரிவித்தது.

ரயில்வே வாரியம் DA உயர்வை தலா 7 சதவிகிதம் என இரண்டு பகுதிகளாக அறிவித்துள்ளது மற்றும் 6வது ஊதியக் குழுவின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கும்  இது பொருந்தும். தற்போது ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 196 சதவீதத்திலிருந்து 7 சதவீத புள்ளிகளால் 203 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அகவிலை நிவாரணம், அடிப்படை கருணைத் தொகையில் 368 சதவீதத்திலிருந்து 381 சதவீதமாக அதிகரித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!