மக்களுக்கான சிலிண்டர் மானிய அறிவிப்பு – மத்திய அரசின் முக்கிய முடிவு!
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் காரணமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வந்தத்தால் மத்திய அரசு சிலிண்டருக்கு மானியம் வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
சிலிண்டருக்கான மானியம்
மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்று சமையல் எரிவாயு.அது இல்லாவிட்டால் மக்களின் நிலைமை மிக மோசமான நிலைமைக்கு மாறிவிடும்.அதே போல்,கொரோனா மற்றும் உக்ரைன் போர் காரணமாக கடந்த 2 வருட காலமாக சிலிண்டர் விலை ரூ.1000 க்கும் எட்டியுள்ளது.சிலிண்டர் விலை மேலும் மேலும் உயர்ந்து கொண்டிருந்ததன் காரணமாக நடுத்தர மக்கள் வாங்க முடியாமல் அவதிபடுகின்றனர்.குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் சமையல் சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து மானியம் வழங்கப்படுகிறது.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!
இந்த விஷயத்தில் இருந்து அரசுக்கு 2 நிலைப்பாடுகள் உள்ளதாக தெரிகிறது. ஒன்று, மானியம் இல்லாமலேயே சமையல் சிலிண்டர்களை வழங்குவது. மற்றொன்று, குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டும் மானியம் வழங்குவது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் சமையல் சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து மானியம் வழங்கப்படுகிறது. அப்படி மானியம் வாங்குவோருக்கு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயரும் அச்சம் இந்தியாவில் உள்ளது.
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடியில் அடுத்தடுத்து முறைகேடு – பொதுமக்கள் அதிருப்தி!
தற்போதைய நிலையில், மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டத்தின் கீழ் சில விதிமுறைகளின்படி சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே சிலிண்டர் மானியம் வழங்கப்படும். அதேபோல், உஜ்வாலா திட்டம் பயனாளிகளுக்கு மானிய உதவி கிடைக்கும். உஜ்வாலா திட்டம் என்பது வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்களுக்கு சுகாதாரமான சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமாகும்.கொரோனா பிரச்சினைக்குப் பிறகு, பொதுமக்களுக்கான சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட்டது. நீண்ட காலத்துக்குப் பிறகு இப்போதுதான் சிலிண்டர் மானியம் வரத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அனைத்து மக்களுக்கும் சிலிண்டருக்கான மானியம் வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.