‘குலாப்’ புயல் இன்று மாலை கரையை கடக்கும் – 2 மாநிலங்களுக்கு ஆபத்து! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

0
'குலாப்' புயல் இன்று மாலை கரையை கடக்கும் - 2 மாநிலங்களுக்கு ஆபத்து! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
'குலாப்' புயல் இன்று மாலை கரையை கடக்கும் - 2 மாநிலங்களுக்கு ஆபத்து! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
‘குலாப்’ புயல் இன்று மாலை கரையை கடக்கும் – 2 மாநிலங்களுக்கு ஆபத்து! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘குலாப்’ புயல் இன்று மாலை கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து ஆந்திரா, ஒடிசா என 2 மாநிலங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

குலாப் புயல்:

இன்று மாலை கரையை கடக்கவிருக்கும் ‘குலாப்’ புயலால் வடக்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய ஒடிசா கடலோர மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இப்புயல் ஆந்திராவின் கோபால்பூர் (ஒடிசா) மற்றும் கலிங்கபட்டணம் இடையே 95 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பாகிஸ்தானால் பெயரிடப்பட்டுள்ள ‘குலாப்’ புயல், தற்போது ஒடிசாவின் கோபால்பூருக்கு கிழக்கு-தென்கிழக்கில் 270 கிமீ தொலைவிலும், ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கே 330 கிமீ தொலைவிலும் நிலை கொண்டு உள்ளது.

கண்ணன், ஐஸ்வர்யாவை வீட்டில் சேர்த்துக்கொள்ள ஒத்துக்கொள்ளும் மூர்த்தி – அடுத்த எபிசோட்!

தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்கள் ஒடிசாவிலும், ஐந்து ஆந்திராவிலும் தயார் நிலையில் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு கடற்கரையில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தின் தெற்குப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என அடையாளம் காணப்பட்ட ஏழு மாவட்டங்களில் ஒடிசா அரசாங்கம் மக்களை வெளியேற்றும் பணிகளை தொடங்கியுள்ளது. சூறாவளி புயலால் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்டங்களில் அதிகபட்ச கவனம் செலுத்தப்படுகிறது.

இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை செப்.27 முதல் நீக்கம் – கனடா அரசு அறிவிப்பு!

‘குலாப்’ புயல் ஒடிசாவைத் தாக்க உள்ள இரண்டாவது புயலாக மாறியுள்ளது. யாஸ் புயல் நான்கு மாதங்களுக்கு முன்பு கரையை கடந்தது. குலாப் சூறாவளியின் தீவிரம் 2018 ஆம் ஆண்டில் மாநிலத்தை தாக்கிய புயலான ‘திட்லி’ போலவே இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பாதிப்பு ஓரளவு கட்டுப்படுத்தப்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!