தமிழகத்தின் 9 துறைமுகங்களுக்கு புயல் கூண்டு எச்சரிக்கை – காற்றழுத்த தாழ்வு மண்டல எதிரொலி!
ஆந்திரா கடலோர பகுதி மற்றும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தகவல் தெரிவித்தது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக உருவாகியுள்ளது. அதனால் தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை எதிரொலி
ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கரையோரத்தில் குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்தது. அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு – வட மேற்கில் நகர்ந்து வலுப்பெற்று புயலாக உருமாறி உள்ளது.
UPI பண பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றம்? தகவல் வெளியீடு!
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ஆகிய துறைமுகங்களில் 1-வது புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் கோபால்பூர் அருகே 20 கி.மீ. தூரத்தில் நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு சத்தீஸ்கரை நோக்கி சென்று வலுவிழக்கும். இந்த புயலின் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவையில் இடி,மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதே போல நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யும் வாய்ப்புள்ளது. அத்துடன் வரும் 14ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அத்துடன் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்