மாணவர்களிடம் நடக்கும் நூதன மோசடி.. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை!
பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறி வங்கி விவரங்கள் திருப்படுவது குறித்து மாவட்ட கல்வி முதன்மை அலுவலருக்கு சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
கல்வி உதவித்தொகை:
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கு உதவியாக இருக்கும் வகையில் அரசு பல்வேறு உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் அதிகம் பயனடைந்து வருகின்றனர். கல்வி உதவித்தொகைக்கு ஏதுவாக மாணவர்களுக்கு தனியாக வங்கி கணக்கு உருவாக்கப்படுவது வழக்கம். இவை பெற்றோரின் கணக்குடனும் இணைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அதில், பேசுபவர் குழந்தைகளின் பள்ளி, கல்லூரிகளில் இருந்து பேசுவதாகவும் கல்வி உதவித்தொகை வழங்க இருப்பதாகவும், அதற்கு வங்கி கணக்கு எண், gpay, QR கோடு போன்றவற்றை ஸ்கேன் செய்து அனுப்ப சொல்லுகின்றனர். இதை பள்ளியில் இருந்து தான் கேட்பதாக நினைத்து பெற்றோர்களும் அனுப்பி விடுகின்றனர். ஆனால், அவை மோசடிகாரர்களின் சதி வேலை என்று பின்னர் தான் தெரிய வந்துள்ளது. அனுப்பிய விவரங்களை வைத்து வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடி விடுகின்றனர். அவர்கள் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தங்களின் விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை வரை “ரெட் அலர்ட்” – வானிலை ஆய்வு மையம் தகவல்!
Exams Daily Mobile App Download
இது தொடர்பான புகார்களை பொதுமக்கள் 1930 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையத்திலும் பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை மூலம் இது போன்ற மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.