வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – சைபர் கிரைம் அறிவுறுத்தல்!
வங்கி கணக்கு விவரங்கள், ஏடிஎம் எண் போன்றவற்றை யாருக்கும் தெரிவிக்க கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
வங்கி கணக்கு விவரங்கள்:
இந்தியாவில் வங்கி கணக்கை மையமாக வைத்து ஏராளமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மர்ம கும்பல்கள் மக்களின் வங்கி கணக்கு விவரங்களை சேகரித்து பல்வேறு பண மோசடிகளை செய்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு காலத்தில் அதிகமான மக்கள் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். இதனால் தங்கள் வங்கி கணக்கில் விவரங்களை செயலிகளில் பதிவிட வேண்டி உள்ளது. அதனால் பல்வேறு மோசடிகள் நடைபெற்றது. வங்கி கணக்கு வைத்திருப்போரின் மொபைல் எண்களை கைப்பற்றி தொடர்பு கொண்டு பணம் கேட்பது, கடன் வழங்குவதாக கூறி பணம் பறிப்பது போல சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகிறது.
ஜூலை 10 வரை 8 உள்ளாட்சி அமைப்புகளில் முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!
வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் செல்போன் எண்ணுக்கு அவர்களது வங்கியில் இருந்து அனுப்பப்படுவது போல் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாந்து தனது விவரங்களை அனுப்புகின்றனர். இதன் மூலம் அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கின்றனர். வங்கி கணக்குடன் ஆதார், பான் எண் போன்றவற்றை இணைக்க வேண்டும் என கூறி அழைப்புகள் வருவதாக பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். இதை நம்பி மக்கள் தங்கள் வங்கி சேமிப்பு பணத்தை இழக்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
வங்கியின் இணையதளத்தை போன்று போலி இணையதளங்கள் செயல்படுகிறது இதில் வாடிக்கையாளர்கள் நம்பி தங்கள் விவரங்களை கொடுத்து விடுகின்றனர். இதனை வைத்து மோசடி கும்பல் ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்து விடுகின்றனர். வங்கியில் இருந்து அழைப்பதை போல செல்போனில் தொடர்பு கொண்டால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் வங்கி கணக்கு விவரங்கள், ஏடிஎம் எண் போன்றவற்றை யாருக்கும் தெரிவிக்க கூடாது என்றும் சைபர் கிரைம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.