மத்திய நீர்வளத்துறை வேலைவாய்ப்பு 2021 – ITI தேர்ச்சி போதும்!!!
மத்திய அரசின் கீழ் செயல்படும் நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள கைவினைஞர் பணியிடங்கள் நிரப்பிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த மொத்த விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | மத்திய நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையம் |
பணியின் பெயர் | Craftsman |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.12.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, கைவினைஞர் பணிகளுக்கு காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
Craftsman பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Coaching Center Join Now
வயது வரம்பு:
அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 ஆகவும் அதிகபட்சமாக 27 வயதிற்கு இடைப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.20,200/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 27.12.2021 ம் தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.