2 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர்களை இலவசமாக வழங்குவது குறித்தான அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது.
இலவச சிலிண்டர்:
மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர்களை வழங்கி உள்ளது. இவர்கள் மாதம்தோறும் ரூபாய் 300 மானியத்தில் கேஸ் சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள முடியும்.இதில் கடந்த மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பிரதமர் மோடி சிலிண்டர் விலையை ரூபாய் 100 குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இன்னொரு புறம் உத்தரபிரதேச மாநில அரசானது ஹோலிப்பண்டிகை மற்றும் தீபாவளி பண்டிகை சமயத்தில் வருடத்திற்கு இரண்டு இலவச சிலிண்டர்களை உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
RITES நிறுவனத்தில் Hindi Assistant காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.35,000/- || உடனே விரையுங்கள்!
இதனால் இத்திட்டத்தின் மூலம் பலனடையும் சுமார் 2 கோடி குடும்பங்கள் இலவச சிலிண்டர்களை பரிசாக பெறுவார்கள். 2023 நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் இந்த ஹோலி பண்டிகை சமயத்தில் அமலுக்கு வந்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு காரணமாக ஆண்டுக்கு ரூபாய் 2312 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும், உத்திரபிரதேசத்தில் வசிக்கும் பயனாளிகளுக்கு மட்டுமே இந்த சலுகை நிபந்தனையுடன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.