வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம் – முழு விவரம் இதோ!

0
வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம் - முழு விவரம் இதோ!

அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாள் மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்:

இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பற்றிய அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று (மார்ச் 16) மதிய வேளையில் வெளியிட்டார். அப்பொழுது அவர் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு ஏப்ரல் 19ம் தேதியும், ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு மே 13ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேலும் இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் ஜூன் 4ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார்.

இதனை தொடர்ந்து இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு நடத்தப்படும் சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கைகள் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஜூன் 2ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம் ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நாட்களில் விடுமுறை – விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம்!

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!