குடியரசு தினத்தையோட்டி ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு – கோவை மாவட்ட நிர்வாகம் அதிரடி!
நாட்டின் 74வது குடியரசு தினவிழா நாளை மறுநாள் (ஜனவரி 26) கோலாகலமாக கொண்டப்பட இருக்கிறது. அதற்காக கோவை மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
குடியரசு தின பாதுகாப்பு:
ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் 74வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட இருக்கிறது. சென்னையில் முதல்வர் தலைமையில் கொடியேற்றம் நடைபெறுவதுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்நிலையில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.
பிரபல நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியீடு – 800 காலிப்பணியிடங்கள்!! Apply Now!!
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். கோவை மத்திய ரயில் நிலையத்தில் ரயில்வே போலிசாருடன் இணைந்து கோவை மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையத்திற்கு வருபவர்கள் கடுமையான சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.
மோப்பநாய் உதவி கொண்டும் வெடிபொருள் கண்டறியும் நவீன கருவிகள் கொண்டும் ரயில் தண்டவாளங்கள் நடைமேடைகள் முழுவதும் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து ரயில்வே துறை டிஎஸ்பி பிரமோத் நாயர் தலைமையில் ரயில்வே காவல் ஆய்வாளர் சுனில் குமார் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சோதனை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.