ஜனவரி 1-15 நடப்பு நிகழ்வுகள்- தமிழ்நாடு

0

தமிழ்நாடு

1.தெற்கு ரயில்வேக்கு 3,351 கோடி ரூபாய் வருவாய்

  • தெற்கு ரயில்வேயில் பயணிகள் ரயில்களின் தேவை அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் மொத்தம் 53.70 கோடி (537 மில்லியன்) பேர் பயணம் செய்துள்ளனர். இதனால் மொத்தம் ரூ.3,351 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு வருவாயை ஒப்பிடும்போது 4 சதவீதம் அதிகமாகும்.சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2.மெட்ரோரயில் 2வது கட்ட திட்டம்ஆழ்வார்பேட்டையில்   ஆய்வு பணிகள் தீவிரம்

  • சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டப் பணிகள் குறித்து ஆழ்வார்பேட்டையில் லஸ் சர்ச் சாலை, சி.வி.ராமன் சாலைகளையொட்டியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • சென்னையில் முதல் கட்டமாக 45 கி.மீ.தூரம் நடந்துவரும் மெட்ரோ ரயில் பணிகள் 2018-ம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும்.குறிப்பாக, அண்ணாசாலை யில் டிஎம்எஸ் – சின்னமலை வரையில் வரும் 2018 மார்ச் மாதத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்க, இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

3.170 மணி நேரம்.. உலகின் நீண்ட யோகா மாரத்தான் :   சென்னை பெண் கவிதா கின்னஸ் சாதனை

  • சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த கவிதா (31), 170 மணி நேரங்கள் தொடர்ந்து யோகா செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
  • டிசம்பர் 23-ம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கிய அவரின் யோகா பயணம், டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணி வரை நீண்டு சாதனை படைத்துள்ளது.இதைத் தொடர்ந்து பதிவு செய்து வந்த கின்னஸ் அதிகாரிகள், அதே நாளில் சான்றிதழை வழங்கியுள்ளனர்.

4.இனம்மொழிமதம் வேறுபாடுகளை மறந்து அனைவரையும் ஒன்றுபடுத்துவது இசை:உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி பெருமிதம்

  • இனம், மொழி, மதம் ஆகிய வேறுபாடுகளை மறந்து மக்கள் அனைவரும் ஒன்றுபட இசை மட்டுமே உதவுகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
  • சென்னையில் மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.மியூசிக் அகாடமி அரங்கில் நடந்த இந்த விழாவுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமை தாங்கி, என். ரவிகிரணுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது, வி.கமலாகர் ராவ், ராதா நம்பூதிரி ஆகியோருக்கு ‘சங்கீத கலா ஆச்சார்ய’ விருது, சுகன்யா ராம்கோபால், முத்து கந்தசாமி தேசிகர் ஆகியோருக்கு டிடிகே விருது, முனைவர் டி.எஸ்.சத்யவதிக்கு ‘இசையறிஞர்’ விருது ஆகிய விருதுகளை வழங்கிப் பேசினார்.

5. பேரிடர் நிவாரண மையங்களுக்கு வழங்க ரூ.1 கோடியில்   100 ஜெனரேட்டர்சென்னைமாநகராட்சி வாங்குகிறது

  • சென்னையில் இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது பொதுமக்களை தங்க வைக்கும் நிவாரண மையங்களில் மின்சாரம் வழங்க ரூ.1 கோடியில் 100 ஜெனரேட்டர்களை சென்னை மாநகராட்சி வாங்க உள்ளது.

6.அரசின் சேவைகளை வழங்குவதற்கான புதிய ‘மின்னாளுமை கொள்கை 2017’: முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார்

  • அரசுத்துறைகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இருப்பிடம் அருகில், அரசின் சேவைகளை வழங்குவதற்கும் பல்வேறு வழிகாட்டுதல்களையும் தெரிவிக்கும் ‘ மின்னாளுமைக் கொள்கை-2017’முதல்வர் கே.பழனிசாமி நேற்று வெளியிட்டார்.

7.சுகாதாரத்துறை திட்டங்களுக்கு தனி சமூக ஊடக வலைதளம்அமைச்சர் விஜயபாஸ்கர்தொடங்கி வைத்தார்

  • அரசின் திட்டத்தை விளக்கும் சமூக ஊடக வலைதளத்தை துவக்கி வைத்த அமைச்சர்
  • மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் குறும்படங்களை திரையிட பிரத்யேக சமூக ஊடக வலைதளத்தை (பேஸ்புக், டிவிட்டர், யூடியூப்) அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

8.தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது

  • தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த, ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது
  • கொங்காடை குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் மாணவனும், ஆய்வுக்குழுத் தலைவருமான, எம்.சின்னக்கண்ணன் இந்த மாநாட்டில் பங்கேற்று, ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, இளம் விஞ்ஞானி பட்டத்தையும், பரிசையும் வென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் மணிப்பூரில் நடைபெற உள்ள இந்திய அறிவியல் மாநாட்டுக்கும் இந்த ஆய்வுக் கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.மாணவர் சின்னக்கண்ணனுக்கு இன்று ஈரோடு கலைக்கல்லூரி சார்பில் பாராட்டு விழா நடக்கிறது.

9.சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள்பயிற்சியாளர்களுக்கு ரூ.99 லட்சம் ஊக்கத்தொகைமுதல்வர் பழனிசாமி வழங்கினார்

  • சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 விளையாட்டு வீரர்கள், 5 பயிற்சியாளர்களுக்கு ரூ.99 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்.
  • இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2017-ம் ஆண்டு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஜி.லட்சுமணன், எஸ்.ஆரோக்கிய ராஜிவ், ஆர்.மோகன்குமார் ஆகியோர் தங்கப் பதக்கங்கள் வென்றனர்.
  • இதேபோல் கனடாவில் நடந்த 7-வது உலக அளவிலான உயரம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கே.கணேசன், சி.மனோஜ், அ.செல்வராஜ் ஆகியோர் பதக்கங்கள் வென்றனர்.மேலும் உஸ்பெக்கிஸ்தானில் நடைபெற்ற 9-வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பி.விக்காஸ், வி.லெனார்ட், சு.தனுஷ் ஆகியோரும் பதக்கங்களை வென்றனர்.

10.  ரூ. 3 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டம்

  • சிட்லப்பாக்கம் மற்றும் மாடம்பாக்கம் பேரூராட்சி குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.3 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

11. பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை:

  • காவல் துறையின் புதிய வியூகமும் மக்கள் ஒத்துழைப்பும்தான் காரணம் – செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்து விவரிக்கிறார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
  • மக்கள் ஒத்துழைப்பும் காவல்துறையின் புதிய வியூகமும்தான் பெண்கள் பாதுகாப்பில் சென்னைக்கு முதல் இடம் கிடைக்கக் காரணம் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

12.41 வது தென்னிந்திய புத்தகக் கண்காட்சிஜன.10 முதல் 22  வரை சென்னையில் நடக்கிறது

  • தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது.40 ஆண்டுகளாக நடந்த கண்காட்சி 41-வது ஆண்டாக வரும் 10-ம் தேதி துவங்க உள்ளது.
  • தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சென்னை புத்தகக் கண்காட்சியை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. சென்னை தவிர மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் பபாசி புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.ஆண்டு தோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் 700 அரங்குகள் வரை அமைக்கப்படுகிறது.

13. இந்தியா வழங்கிய ஆம்புலன்ஸ்கள் இலங்கை முழுவதும்  விரைவில் இயக்கம்கூடுதலாக 209 வாகனங்களை வழங்க  இந்தியா முடிவு

  • இந்திய அரசு வழங்கிய ஆம்புலன்ஸ்கள் இலங்கை முழுவதும் விரைவில் இயக்கப்பட உள்ளன.
  • பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு முதல் முறையாக 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்றார்.அப்போது இந்தியாவில் செயல்படும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை இலங்கையிலும் அமல்படுத்த உறுதி அளித்தார்.
  • அதன்பேரில் இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு ரூ.50.81 கோடி நிதியுதவியும், 88 ஆம்புலன்ஸ் வாகனங்களும் வழங்கப்பட்டன.மேலும் அந்நாட்டு ஊழியர்கள் 600 பேருக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

14.வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் தமிழகம் முக்கிய  பங்காற்றியதுஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம் 

  • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தமிழகம் முக்கிய பங்காற்றியது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
  • சென்னை பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறை சார்பில் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தமிழகத்தின் பங்கு மற்றும் 75-வது ஆண்டு நிறைவு’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கின் தொடக்கவிழா நேற்று நடந்தது.

15.தேசிய பார்வையற்றோர் சங்கம் சார்பில்எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நூல் பிரெய்லி வடிவில்வெளியீடு

  • தேசிய பார்வையற்றோர் சங்கம் சார்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘உலகின் மிகச் சிறிய தவளை’ என்ற நூல் பிரெய்லி வடிவில் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.
  • பார்வையற்றோர் கல்வி கற்பதற்காக ‘பிரெய்லி’ முறையைக் கண்டறிந்த லூயி பிரெய்லியின் 209-வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய பார்வையற்றோர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் சென்னையில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.
  • குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை நிதி திரட்ட 7-ம் தேதி மாரத்தான் ஓட்டம்
  • குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக சென்னையில் மாரத்தான் ஓட்டம் சென்னையில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

16. 4-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் 10ம் தேதி தொடக்கம்முன்னோட்டநிகழ்ச்சி சென்னையில்  நடந்தது

  • தமிழகத்தின் 4-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் வரும் 10-ம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெற உள்ளது.இதில் 6 நாடுகளைச் சேர்ந்த 12 பலூன்கள் பங்கேற்க உள்ளன.
  • சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக சர்வதேச பலூன் திருவிழா கடந்த 3 ஆண்டுகளாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடத்தப்பட்டு வருகிறது.4-வது ஆண்டு பலூன் திருவிழா வரும் 10-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது.

17. இளைய தலைமுறையினரைக் கவர புது வடிவம் பெறும்   திருக்குறள்

  • திருக்குறள் சிறந்த இலக்கியம் மட்டுமல்லாது, ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் வழிகாட்டியாகவும் உள்ளது. ஒவ்வொரு குறளும் மனித வாழ்க்கை முறையின் அங்கங்களான பக்தி, சாகச வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, ஈகை, அரசாட்சி, பாதுகாப்பு, நட்பு, காதல் உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கின்றன.
  • உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறளை அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் செயலரும், டிஎன்பிஎஸ்சி உறுப்பினருமான மு.இராசாராம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரு கிறார்.

திருக்குறள்முற்றோதல்திட்டம்

  • இவர் தமிழ் வளர்ச்சித் துறை செயலராக இருந்தபோதுதான் சீன மற்றும் அரபு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது.இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ‘குளோரி ஆஃப் திருக்குறள்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.இந்நூல் 15 பதிப்புகள் செய்யப்பட்டு விற்பனையாகியுள்ளன. இவர் தமிழ் வளர்ச்சித் துறை செயலராக இருந்தபோது 1330 திருக்குறளையும் ஒப்பிக்கும் குழந்தைகளுக்கு பரிசளிக்கும் திட்டமான திருக்குறள் முற்றோதல் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது.
  • இதன் தொடர்ச்சியாக திருக்குறளை இன்றைய தலைமுறையினருக்கு கொண்டுபோய் சேர்க்கும் விதமாக, திருக்குறளை மையமாகக் கொண்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இசை மற்றும் பாரம்பரிய, கிராமிய நடனத்துடன் கூடிய நாடகத்தை உருவாக்கியுள்ளார்.

18. இந்தியாவின் டாப் 10 காவல் நிலையங்கள் பட்டியல்  வெளியீடு:முதலிடத்தில்கோவைஆர்.எஸ்.புரம்;5வது இடத்தில் சென்னை அண்ணாநகர்

  • இந்தியாவின் சிறந்த காவல் நிலையமாக கோயம்புத்தூரின் ஆர்.எஸ்.புரம் (பி-2), தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இதற்கான விருதினை மத்தியப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.
  • சிறந்த 10 காவல்நிலைய பட்டியலில் தமிழகத்தின் மற்றொரு காவல் நிலையமாக அண்ணாநகர்(கே-4) தேர்வாகி உள்ளது. இது 5-வது இடத்தில் உள்ளது.

19.‘ஒன்றே பாரதம் ஒப்பிலா பாரதம்’ திட்டம்: மாமல்லபுரத்தில் ஜம்மு காஷ்மீர் நடன நிகழ்ச்சி

  • ‘ஒன்றே பாரதம் ஒப்பிலா பாரதம்’ என்ற திட்டத்தின்கீழ் மாமல்லபுரத்தில் நேற்று ஜம்மு காஷ்மீர் மாநில நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன

20.எம்.எல்.ஏ.,க்களுக்கு இருமடங்கு ஊதிய உயர்வு:  சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

  • எம்.எல்.ஏ.,க்கள் ஊதிய உயர்வு மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
  • கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை ரூ.55,000-த்திலிருந்து ரூ.1,05,000 ஆக அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவையில் முதல்வர் கே.பழனிச்சாமி அறிவித்தார். ஜூலை 1-ம் தேதி முதல் இந்த உயர்த்தப்பட்ட சம்பளம் நடைமுறைக்கு வருவதாகவும் கூறினார்.

21. இனிமேல் ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்தப்படும்:

  • வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே தொடர்ந்து ஆசிரியர் நியமனம் – கல்வி அமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு
  • தற்போது பின்பற்றப்பட்டுவரும் வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனங்களைத் தொடர்ந்து மேற்கொள்வது என்றும், ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்துவது என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
  • தற்போது அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் வெயிட்டேஜ் முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இம்முறையில், தகுதித்தேர்வு, பிளஸ் 2 தேர்வு, பட்டப் படிப்பு, பிஎட் (இடைநிலை ஆசிரியர் எனில் ஆசிரியர் பயிற்சி தேர்வு) ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.

22. ஐஏஎஸ், ஐபிஎஸ் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

  • ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதன்மைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
  • 2017-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பணிகளில் 985 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த அக்டோபர் 28, 30, 31 மற்றும் நவம்பர் 1, 3 ஆகிய 5 நாட்கள் முதன்மைத்தேர்வு நடத்தப்பட்டது.
  • முதன்மைத்தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. அதன்படி, இத்தேர்வில் 2,568 பேர் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 218 பேர் தமிழக மாணவர்கள் ஆவர். நேர்காணல், பிப்ரவரி 2018-ல் தொடங்கும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. நேர்காணல் முடிந்ததும் முதன்மைத்தேர்வு, நேர்காணல் மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு இறுதி தெரிவுப் பட்டியல் வெளியிடப்படும்.

23. தமிழ்நாடு பொன் விழா ஆண்டு கொண்டாடப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

  • சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டதை ஒட்டி தமிழ்நாடு பொன் விழா ஆண்டடாக கொண்டாடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
  • இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை அவர் வாசித்தார்.
  • அப்போது அவர் கூறுகையில் “ஆளுமைத் திறம்கொண்ட தமிழ்ப் புலவர்கள் ‘தமிழ்நாடு’ என்று வாயாரப் பாடி மனதார அழைத்த நாடு, நம் தமிழ்நாடு! நம்மோடு ஆந்திரம், கர்நாடகம், கேரளம் இணைந்து, ‘பிரசிடன்சி ஆப் மெட்ராஸ்’ என்று ஆங்கிலத்திலும், „சென்னை மாகாணம்’ என்று தமிழிலும் அழைக்கப்பட்டு வந்த நிலையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மாநில பிரிவினை ஏற்படுத்தப்பட்ட பிறகு, சென்னை மாகாணம் என்னும் பெயரை மாற்றித் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றப்படவேண்டும் என்று அன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் அரசின் முன் 1956, ஜூலையில் கோரிக்கையினைக் தியாகி சங்கரலிங்கனார் முன்வைத்தார்.
  • பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசு அமைந்தவுடன், 1967-ஆம் ஆண்டு அப்போதைய “சென்னை மாகாணத்திற்கு” ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட, சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • அதன் தொடர்ச்சியாக, 1969-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் நாள் ‘தமிழ்நாடு’ என்று நமது மாநிலத்திற்கு பெயர் சூட்டப்பட்டது.
  • பேரறிஞர் அண்ணா  2-வது உலகத் தமிழ் மாநாட்டினையும், எம்.ஜி.ஆர் 5-வது உலகத் தமிழ் மாநாட்டினையும், ஜெயலலிதா 8-வது உலகத் தமிழ் மாநாட்டினையும் சிறப்பாக நடத்தி, தமிழின் பெருமையையும், தொன்மையையும் உலகறிய செய்தார்கள்.
  • எம்.ஜி.ஆர், தமிழுக்கென்று தனிப் பல்கலைக்கழகத்தை தஞ்சாவூரில் நிறுவினார்கள். மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்தார்.

24. பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா கோலாகலத் தொடக்கம்:

  • வரவேற்பைப் பெற்ற 2.O, ஆங்கிரி பேர்ட், ஐஸ்கிரீம் வடிவ பலூன்கள்
  • பொள்ளாச்சியில் 4-ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியளவில் முதல் பலூன் பறக்க விடப்பட்டது.
  • அமெரிக்கா, பிரான்ஸ், போலந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த 12 வெப்ப காற்று பலூன்கள் பறக்க விடப்பட்டன. 8 நாடுகளைச் சார்ந்த 12 பைலட்கள் பங்கேற்றனர் .
  • இதில் தமிழக சுற்றுலா வளர்ச்சித் துறையின் இலச்சினையுடன் கூடிய பலூன், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர உள்ள 2.O 3டி பலூன், ஆங்கிரி பேர்ட், ஐஸ்கிரீம் வடிவில் அமைக்கப்பட்ட பலூன்கள் பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

25.  எழுத்தாளர் மாலனுக்கு ‘பாரதிய பாஷா’ விருது

  • இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்று என மதிக்கப்படும் ‘பாரதிய பாஷா விருது’ இவ்வாண்டு தமிழ் எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்படுகிறது.
  • இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்று ‘பாரதிய பாஷா’ விருது. இந்த ஆண்டுக்கான ‘பாரதிய பாஷா’ விருது எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்படுகிறது. கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இலக்கிய அமைப்பான ‘பாரதிய பாஷா பரிஷத்’, இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
  • இந்த அமைப்பு ஆண்டுதோறும் இந்திய மொழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதன் படைப்பாளிகளுக்கு ‘பாரதிய பாஷா’ விருது வழங்குகிறது.

26.மார்ச் மாதம் விருது விழா

  • ரூ.1 லட்சம் பரிசுத் தொகைக் கொண்ட இந்த விருது வழங்கும் விழா மார்ச் மாதம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
  • பாலகுமாரனுக்கு திரு.வி.க. விருது; பா.வளர்மதிக்கு பெரியார் விருது: முதல்வர் கே.பழனிசாமி ஜன.16-ல் வழங்குகிறார்
  • இதன்படி இந்த ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது கோ.பெரியண்ணனுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான பெரியார் விருது – பா.வளர்மதி, அம்பேத்கர் விருது- ஜார்ஜ். கே.ஜே., அண்ணா விருது- அ.சுப்பிரமணியன், காமராஜர் விருது- தா.ரா.தினகரன், பாரதியார் விருது- சு.பாலசுப்பிரமணியன் (எ)பாரதிபாலன், பாரதிதாசன் விருது- கே.ஜீவபாரதி, திருவிக விருது- எழுத்தாளர் வை.பாலகுமாரன், கி.ஆ.பெ.விசுவநாதம் விருது- ப.மருதநாயகம் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
  • விருதுபெறுவோர் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு பவுன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான சான்றிதழ் வழங்கப்படும்.
  • விமான நிலையத்தில் உள்ள வசதிகளைப்போல சேலம், கோவை, மதுரையில் விரைவில் ‘பஸ் போர்ட்’
  • விமான நிலையத்தில் உள்ள வசதிகளைப்போல சேலம், கோவை, மதுரையில் விரைவில், ‘பஸ் போர்ட்’ தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
  • சேலம் மாவட்டத்தில் ரூ.21.97 கோடி மதிப்பில் இரும்பாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

27. இஸ்ரோ தலைவராக தமிழகத்தின் சிவன் நியமனம்

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக தமிழகத்தின் சிவன்.கே நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ‘இஸ்ரோ’ தலைவர் கிரண் குமாரின் பதவிக் காலம் முடிவதைத் தொடர்ந்து புதிய தலைவராக சிவன்.கே நியமிக்கப்பட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இப்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருக்கிறார்.
  • சென்னை எம்ஐடியில் 1980-ல் ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங் முடித்து, 1982-ல் பெங்களூரில் இந்திய அறிவியல் நிறுவனத்தில் எம்இ பட்டமும் மும்பை ஐஐடியில் முனைவர் பட்டமும் பெற்றார். 1982-ல் ‘இஸ்ரோ’வில் பிஎஸ்எல்வி திட்டத்தில் சிவன் முக்கிய பங்காற்றினார். அறிவியல் சேவைக்காக 2014-ல் சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டமும் விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி விருது உட்பட பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார். 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்.
ஜனவரி 1-15 நடப்பு நிகழ்வுகள்- தமிழ்நாடு PDF வடிவம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!