தமிழகத்தில் தினசரி 11 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

0
தமிழகத்தில் தினசரி 11 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
தமிழகத்தில் தினசரி 11 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
தமிழகத்தில் தினசரி 11 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தினசரி 11 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி இருக்கிறது. தற்போது கொரோனா பாதிப்பு 150யை கடந்துவிட்டது. அதனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், துணை சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பார்வையாளர்கள் ஆகியோர் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. இந்த கட்டுப்பாடு தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ChatGPT மூலமாக பணம் கிடைக்குமா? இது தெரியாம போச்சே!

இந்நிலையில் தமிழகத்தில் தினமும் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இது குறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

அதில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனை மேற்கொள்வதில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் சதவிகிதம் 0.6ல் இருந்து 3 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் 3000 பேருக்கு தினசரி கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதனை 11 ஆயிரமாக உயர்த்தப்பட வேண்டும் எனவும், மாவட்டங்களில் மக்கள் தொகைக்கு ஏற்றார் போல பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!