ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 29, 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 29, 2018

  • பிரதான் மந்திரி ஸ்வஸ்த்யா கரக்ஷா யோஜனா ( Pradhan Mantri Swasthya Swraksha Yojana (PMSSY) திட்டத்தின் கீழ்,ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள பிலாஸ்பூரில் புதிதாக அனைந்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (All india Institute of Medical Sciences) அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • ஆபரேசன் அலர்ட்  இந்திய எல்லைப் பகுதிகளில் பகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்கான மத்திய எல்லைப் பாதுகாப்பு படையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை.
  • “தனு யாத்திரைத் திருவிழா” ( Dnanu Yatra Festival ) ஒடிசா மாநிலத்தில் நடைபெற்றது.
  • இந்தியாவின் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய பூங்கா ஹைதராபாத்தில் துவங்கப்பட்டுள்ளது.
  • பாலஸ் தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.
  • தொலை மருத்துவ சேவை இந்தியா – இலங்கை ஒப்பந்தம். புதுவை ஜிப்மர் மருத்துவமனை மூலம் இது தொடங்கப்பட்டுள்ளது.
  • “வஜ்ரா பிரகார்” இந்திய அமெரிக்க நாடுகளின் கூட்டு இராணுவப் பயிற்சி வஜ்ரா பிரகார் எனும் பெயரில் ஜனவரி 2018 – ன் மூன்றாம் வாரத்தில் வாசிங்டனிலுள்ள சியாட்டில் நகரில் நடைபெற்றது.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹரிந்தர் மாலி மற்றும் இந்திரா நாயுடு ஹாரிஸ் என்ற இரண்டு பெண்களுக்கும் கனடாவின் ஒண்டாரியோ மாகாண அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • “ஜீ 77” கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை, ஈக்குவடார் நாட்டிடம் இருந்து எகிப்து நாடு ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் மொத்தம் 134 நாடுகள் உள்ளன.
  • பிரிட்டனின் முதல் பெண் சீக்கிய எம்.பியான பிரீத் கௌர் கில்லை அந்நாட்டு எதிர்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரேமி கார்பின் தாம் அமைத்துள்ள நிழல் அமைச்சரவையில் ஓர் அமைச்சராக நியமித்துள்ளார்.
  • 10 வது உலக உணவு மற்றும் விவசாய மன்ற கூடுகை” ( Global Forum For Food & Agriculture) ) ஜனவரி 18 to 20 வரையிலும் ஜெர்மனி நாட்டிலுள்ள பெர்லின் நகரில் நடைபெற்றது.
  • ஐ.நா.வின் புதிய நிரந்திரமல்லாத உறுப்பினராக ஈ.இவடோரியல் ஹெய்னா, இவரி கோஸ்ட், குவைத், பெரு, போலாந்து மற்றும் நெதர்லாந்து ஆறு நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!