ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மார்ச் 21, 2018
- ‘SATH – E – சுழுதுநுஊவு நிதி ஆயோக்கின் (NIIT Aayog) மனித மூலதனத்தை மாற்றுவதற்கான நிலையான செயல்திட்டத்தின் கீழ் கல்வியை (SATH – E) மாற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை நிதி அயோக் வெளியிட்டுள்ளது.
- பத்திரிக்கை தொடர்பு ஆணையத்தின் (PIP) முதன்மை பொது இயக்குநராக “சிதன் சு கார்” (Sitanshu Kar) நியமிக்கப்பட்டுள்ளார்.
- 4 வது இந்தியாவின் சூப்பர் லீக் கால்பந்து போட்டித் தொடரை (ISC) சென்னையின் FC வென்றுள்ளது.
- பனிப்பிரதேசமான அண்டார்டிகாவில் 56 வயதான மங்கள மணி என்ற ISRO விஞ்ஞானி ஓராண்டுக்கும் மேல் தங்கி சாதனை படைத்துள்ளார்.
- இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறை பிரிட்டனின் இயற்கை சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கவுன்சில் குழு இணைந்து கங்கை ஆறு பகுதியில் மேற்கொண்ட நிலத்தடி நீரில் உள்ள ஆர்கனிக் கலப்புப் பற்றி ஆராய்ச்சிக்காக நியூட்டன் பாபா நிதியத்தின் பரிசினை பெற்றுள்ளது.
- உலகின் தலை சிறந்த ஆசிரியர் விருதையும் அதற்கான பரிசுத் தொகையான ரூ. 65 கோடி பிரிட்டனை சேர்ந்த ஆசிரியர் ஆண்ட்ரியா ஜபாரிகாவ் ஆவார்.
- உச்ச நீதிமன்ற நீதிபதி யு.ஆ. கான்வில்கர் (A.M. Kanwilkar) தலைமையில் சட்டடீஸ்கர் மற்றும் ஒடிசா இடையிலான மகாநதி நதிநீர்பகிர்வு தீர்பாயத்தை மத்திய நிர்வளம் மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.
- அழிந்து வரும் பறவையினமான சிட்டுக் கருவிகளை பாதுகாக்கும் நோக்கத்தில் மார்ச் 20 உலக சிட்டுக் குருவி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்திய இயற்கை பாதுகாப்பு சமூகம் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச் சூழல் அமைப்பு இணைந்து இத்தினத்தை கடைபிடிக்கின்றன.
- பேர்ச்சுக்கல் நாட்டின் சிறந்த வீரருக்கான விருதை கிறிஸ்டியானனோ ரொனால்டோ தொடர்ந்து 3 வது முறையாக பெற்றுக் கொண்டார்.
- தமிழக அரசுக்கு மத்திய அரசின் கிரிஷி கர்மான் விருது உணவு தானிய உற்பத்தியை பெருக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சிகளை கவுறவிக்கும் வகையிலும் 2015 16 ஆண்டில் உணவு தானிய உற்பத்தியில் உயரிய சாதனை படைத்து அகில இந்திய அளவில் சிறந்த மாநிலமாக விளங்கியதற்காகவும் வழங்கப்பட்டுள்ளது.
- ஒடிஷாவிலுள்ள பூரி ஜகநாதர் கோவிலின் நூறாவது “நவகலிம்பரா திருவிழா” நினைவாக ரூ. 1000 மற்றும் 10 ரூ மதிப்பிலான காசுகளை குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ளார்.
- ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா மாவட்டத்தில் அமைந்துள்ள கிஷன்கங்கா நீர் மின் திட்டத்தின் (Kishanganga Hydro Project) முதல் அலகு 19.03.2018 அன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளது.