நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 7,2018
2017 ஆம் ஆண்டில் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து அதிக அளவு கடனுதவி பெற்ற நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது.
உலக பொருளாதார மன்றம் “(World Economic Forum) வெளியிட்டுள்ள “உலக உற்பத்தியாளர் பட்டியலில் “(Global Manufucturing Index) இந்தியா 30 வது இடத்தைப் பெற்றுள்ளது. இப்பட்டியல் முதல் மூன்று இடங்களை முறையே ஜப்பான், தென் கொரியா மற்றும் ஜெர்மனிநாடுகள் பெற்றுள்ளன.
பாடகர் SPB க்கு எல்.வைத்தியநாதன் விருது 2018 வழங்கப்பட்டுள்ளது. பிரபல வயலின் இசைக் கலைஞரும் இசையமைப்பாளருமான ட. வைத்தியநாதன் பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
2016 – 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக அளவில் வெளிநாட்டு முதலீடு செய்த நாடுகளில் மௌரீசியஸ் நாடு முதலிடத்திலுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களைவயில் 2.1.2018 அன்று நிறைவேற்றப்பட்டது. பெரு நிறுவனங்கள் தொழிலில் நொடிந்து திவாலாகும் போது அதன் முதலிட்டாளர்கள் பங்கு தாரர்கள் கடன் கொடுத்தவர்கள் ஆகியோரும் பெரும் இழப்பை சமாளிக்க இச்சட்டம் உதவும்.
ஐ.நா.வின் புதிய நிரந்தரமல்லாத உறுப்பினர்களாக ஈகுவடோரியல் ஹெய்னா இவரி கோஸ்ட; குவைத் பெரு போலாந்து மற்றும் நெதர்லாந்துஆறு நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
“ஹார்பா (Harba) என்ற பெயரில் ஏவுகணையை பாகிஸ்தானின் கடற்படை வெற்றிகரமாக சோதித்துள்ளது.
ஆண் – பெண் பணியாளர்களுக்கான சம ஊதியத்தை சட்டப் பூர்வமாக்கியுள்ள உலகின் முதல் நாடு எனும் பெருமையை ஐஸ்லாந்து நாடு பெற்றுள்ளது.
உலகின் மிகப் பெரிய காற்று சுத்திகரிப்பு ஆலை சீனாவின் ஷாங்சி நகரில் அமைக்கப்பட்டு;ள்ளது. “ஷியான் ஸ்மோக் டவர்” (Xian Smog tower) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த காற்று சுத்திகரிப்பு ஆலை 100அ உயரமுடையது.
10 வது உலகவு உணவு மற்றும் விவசாய் கூடுகை 2018 (Global Forum for Food & Agriculture) ஜனவரி 18 முதல் 20 வரையில் ஜெர்மனியில் பெர்லினில் நடைபெற உள்ளது.