நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 17 2018
3 வது சர்வதேச மாநாடு செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு “இந்திய மின் நிலையங்கள் 2018” கூடுகை புதுடெல்லியில் R.K. சிங் (மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் நிலையங்கள் அமைச்சர்) தொடங்கி வைத்தார்.
“Ban Sagar Dam” பண் சாகர் அணை மத்தியப்பியப் பிரதேசத்தின் சாத்தூள் மாவட்டத்தில் கேன் ஆற்றில் அமைந்துள்ளது.
இந்தியாவின் முதல் வானொலி திருவிழா புது டெல்லியில் உள்ள UNESCO – அலுவலகத்தால் பிப்ரவரி 5 ல் நடைபெற்றது.
மாணவர்களுக்கு புதுமையான திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்குடன் நிதி அயோக் KPIT Technologies Pune நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய உலகளாவிய மருந்து மாநாடு (India Pharma & India Medical Device 2018 : A Afordable and Quality Health care) பெங்களுரில் நடைபெற்றது.
இந்திய அரசாங்கம் ஆப்கானிஸ்தான் நாட்டின் சிறுபான்மையினருக்கு நீண்ட கால விசா வழங்குதவற்கு முன்வந்துள்ளது.
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த அவர்களால், “அக்ரிகான் – 18 (Agriexpo – 2018 )எனப்படும் சர்வதேச மாநாடு தொடங்கப்பட்ட இடம் கான்பூர்.
“பாசிம் லெகார்” (Paschim Lehar) என்பது Tri – Service கடற்பயிற்சி ஒத்திகை ஆகும். இதில் 40 பெரிய போர் கப்பல்கள் போர் விமானங்கள் கலந்து கொண்டது. இந்தியாவின் மேற்கு கடற்படை படை இதனை மேற்கொள்ள உள்ளது.
2018 ம் ஆண்டின் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு (SCO – 2018) ல் சீனாவில் நடைபெற உள்ளது.
துபாயில் நடைபெற்ற உலக அரசு கூடுகையில் சிறந்த வளர்ந்து வரும் தொழில் நுட்ப விருது (Best Emerging Technology Award) பெற்ற இந்திய சிறப்பு திட்டம் “ஆதார் திட்டம் ஆகும்.
துபாயில் நடைபெற்ற உலக அரசு கூடுகையில் எம் .அரசு சேவை (M – Government Service Award) பெற்ற இந்திய சிறப்பு மொபைல் செயலி உமாங் (Umang) செயலி ஆகும்.