நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 16,2018
தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான (NHPS) மோடிகேர் (Modicare) திட்டத்தை நிராகரித்த இந்தியாவின் முதல் மாநிலம் மேற்கு வங்களாம் ஆகும்.
இந்தியா வங்கதேசத்தின் “நட்பு வாயில்” (Friendship Gate) மேகாலயா மாநிலத்தில் திறக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்க அரசு வறட்சி பாதிப்பை “தேசிய பேரழிவு (National Disaster) என்று அறிவித்துள்ளது.
இராணுவ பயன்பாட்டிற்காக மற்றும் போக்குவரத்திற்காகவும் இந்தியா, ஓமன் நாட்டின் Dugm துறைமுகத்தை அணுகியுள்ளது.
பிரேசில் நாட்டிற்கு நியமிக்கப்பட்ட இந்தியாவின் அடுத்த தூதர் அசோக் தாஸ்.
பாகிஸ்தானின் இந்து சிறுபான்மை சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமனற் உறுப்பினர் கிருஷ்ணகுமாரி ஆவார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 2.7 டன் உணவு, எரிபொருள் மற்றும் இதர பொருள்களை எடுத்துச் செல்ல “ப்ரோக்ரஸ் (Progress)” என அழைக்கப்படும். ஆளில்லா ராக்கெட்டை உருவாக்கிய நாடு ரஷ்யா ஆகும்.
இந்திய வன அறிக்கையின் படி நிலப்பகுதி அடிப்படையில் இந்தியா 10 வது இடம் பெற்றுள்ளது.
ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் 8 வது தியேட்டர் ஒலிம்பிக்ஸ் (Theatre Olympics) இந்தியாவில் நடைபெற விருக்கின்றது.
இந்தியா – ரஷ்யா விவசாய உறவுகளின் 70 வது ஆண்டுகளின் நினைவு கூரும் நிகழ்வாக மாநாடு இராஜஸ்தான் மாநிலத்தின் சூரத்கர் நகரில் நடைபெற்றது.
கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (CSR – 2018) சர்வதேச மாநாட்டின் 12 வது பதிப்பானது கர்நாடக மாநிலத்தின் பெங்களுருவில் நடைபெற்றது.